ஆப்நகரம்

எஃகு உற்பத்தியில் முக்கும் இந்தியா!

அக்டோபர் மாதத்துக்கான இந்தியாவின் கச்சா எஃகு உற்பத்தி 3.4 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 27 Nov 2019, 4:00 pm
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளின் எஃகு உற்பத்தி குறித்த விவரங்களை உலக எஃகு கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் உலக நாடுகள் இணைந்து மொத்தம் 151.49 மில்லியன் டன் எஃகை உற்பத்தி செய்துள்ளன. இது 2018ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் உற்பத்தி செய்யப்பட்ட 155.83 மில்லியன் டன் எஃகை விட 2.8 சதவீதம் குறைவாகும்.
Samayam Tamil எஃகு உற்பத்தியில் முக்கும் இந்தியா


இந்தியாவைப் பொறுத்தவரையில், அக்டோபர் மாதத்தில் மொத்தம் 9.08 மில்லியன் டன் அளவு எஃகு மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் உற்பத்தி அளவு 9.40 மில்லியன் டன்னாக இருந்தது. இது 3.4 சதவீத வீழ்ச்சியாகும்.

மக்களை அழ வைக்கும் வெங்காயம்! விண்ணை முட்டும் விலை!

அக்டோபர் மாதத்தில் சீனா 0.6 சதவீத சரிவுடன் 81.52 மில்லியன் டன் எஃகை உற்பத்தி செய்திருக்கிறது. 2018 அக்டோபரில் சீனாவின் உற்பத்தி அளவு 82.01 மில்லியன் டன்னாக இருந்தது. ஜப்பான் 8.15 மில்லியன் டன் எஃகையும், அமெரிக்கா 7.40 மில்லியன் டன் எஃகையும், பிரேசில் 2.6 மில்லியன் டன் எஃகையும், துருக்கி 2.7 மில்லியன் டன் எஃகையும், உக்ரைன் 2.7 மில்லியன் டன் எஃகையும் அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்துள்ளன.

லண்டனுக்குச் செல்லும் ஓலா டாக்ஸிகள்!

ஐரோப்பிய யூனியனில், ஜெர்மனி 3.3. மில்லியன் டன், இத்தாலி 2.2 மில்லியன் டன், ஃபிரான்ஸ் 1.2 மில்லியன் டன், ஸ்பெயின் 1.2 மில்லியன் டன் என்ற அளவில் உற்பத்தி செய்திருக்கின்றன. உலக எஃகு கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் இணைந்து உலகின் ஒட்டுமொத்த எஃகு உற்பத்தியில் 85 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன.


இது என்னப்பா இந்தியாவுக்கு வந்த சோதனை!!

இந்தியாவின் எஃகு உற்பத்தி நடப்பு நிதியாண்டில்தான் மந்தமாகியுள்ளது. 2018-19 நிதியாண்டில் 142.24 மில்லியன் டன் எஃகை இந்தியா உற்பத்தி செய்திருந்தது. 2014-15ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆண்டு ஒன்றுக்கு 28 மில்லியன் டன் எஃகை இந்தியா கூடுதலாக உற்பத்தி செய்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்