ஆப்நகரம்

இந்தியா வளருமா வளராதா? சர்வதேச நாணய நிதியம் கருத்து!

இந்தியப் பொருளாதாரம் தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார மந்தநிலையானது தற்காலிகமான ஒன்றுதான் எனவும், விரைவில் இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனவும் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 25 Jan 2020, 1:34 pm
இந்தியப் பொருளாதாரம் தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார மந்தநிலையானது தற்காலிகமான ஒன்றுதான் எனவும், விரைவில் இந்தியா வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனவும் சர்வதேச நாணய நிதியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Samayam Tamil indias economic slowdown is temporary says imf chief kristalina georgieva
இந்தியா வளருமா வளராதா? சர்வதேச நாணய நிதியம் கருத்து!


வீழ்ச்சிப் பாதை ஆரம்பம்!

2019ஆம் ஆண்டு தொடங்கியது முதலே இந்தியப் பொருளாதார வளர்ச்சி பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 5 சதவீதமாகக் குறைந்த இந்தியப் பொருளாதாரம், அதைத் தொடர்ந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இன்னும் மோசமாக 4.5 சதவீதமாகக் குறைந்தது. இந்த ஆண்டின் எஞ்சிய காலாண்டுகளிலும் வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2020-21 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் மத்திய மோடி அரசு இருக்கிறது.

வளர்ச்சியில் நம்பிக்கை!

இந்நிலையில், இந்தியா தற்போது சந்தித்திருக்கும் பொருளாதார மந்தநிலையானது தற்காலிகமான ஒன்றுதான் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திரப் பொதுக்கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் தேவோஸ் நகரத்தில் ஜனவரி 24ஆம் தேதி நடைபெற்றது. இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்ட குழு கலந்துகொண்டிருந்தது. அக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரான கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா பேசுகையில், “சர்வதேச அளவிலும் தற்போது பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இந்தியாவிலும் அது காணப்படுகிறது. இந்த மந்தநிலை தற்காலிகமான ஒன்றுதான். இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் வளர்ச்சி மேம்படும்” என்று கூறினார்.

மதிப்பீடு குறைப்பு!

இக்கூட்டம் நடைபெறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர்தான் சர்வதேச நாணய நிதியம் இந்தியப் பொருளாதார வளர்ச்சி குறித்த தனது மதிப்பீட்டைக் குறைத்திருந்தது. இந்தியாவில் பொருளாதார மந்தநிலை இருப்பதால் 2019-20 நிதியாண்டில் வெறும் 4.8 சதவீத வளர்ச்சியை மட்டுமே கொண்டிருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் தனது ஆய்வறிக்கையில் கூறியிருந்தது. இதற்கு முந்தைய மதிப்பீட்டில் 6.1 சதவீத வளர்ச்சி மதிப்பிடப்பட்டிருந்தது. இதுபோல, இந்தியாவின் வளர்ச்சியைக் குறைத்து மதிப்பிட்ட சர்வதேச நாணய நிதியம், தற்போது பொருளாதார மந்தநிலை தற்காலிகமான ஒன்றுதான் என்று கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்