ஆப்நகரம்

ராக்கெட் மோடில் ஏற்றுமதி.. ஆனால் ஒரே ஒரு பிரச்சினை!

இந்தியாவின் ஏற்றுமதி மார்ச் மாதத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

Samayam Tamil 13 Apr 2022, 7:31 pm
மார்ச் மாதத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 19.76% உயர்ந்து 42.22 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள், பொறியியல் பொருட்கள், தோல்பொருட்கள் மிக அதிகளவில் ஏற்றுமதியாகியுள்ளன.
Samayam Tamil exports


ஏற்றுமதி உயர்ந்தாலும் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது ஒரு பிரச்சினையாகவே உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வேறுபாடு ஆகும். மார்ச் மாதம் வர்த்தகப் பற்றாக்குறை 18.51 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த மாதம் இறக்குமதி 24.21% உயர்ந்து 60.74 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்த ஏற்றுமதி வரலாறு காணாத அளவுக்கு 419.65 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகளுக்கு வரும் நல்ல சேதி!
அதேபோல இறக்குமதியும் 611.89 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. ஆக, வர்த்தகப் பற்றாக்குறை 102.63 பில்லியன் டாலராக உள்ளது. மார்ச் மாதம் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் சரக்கு ஏற்றுமதி 42 பில்லியன் டாலராக இருந்துள்ளது.

அதேபோல சேவை ஏற்றுமதி 21.6 பில்லியன் டாலராக இருந்துள்ளது. சேவை ஏற்றுமதி 4.64% உயர்ந்துள்ளது. கொரோனா நெருக்கடி தணிந்துள்ளதாலும், ஒட்டுமொத்த ஏற்றுமதி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதும் நல்ல செய்தியாக வெளிவந்துள்ளது.

எனினும், இறக்குமதி தொடர்ந்து அதிகரிப்பதும், வர்த்தகப் பற்றாக்குறை அதிகரித்திருப்பதும் ஒரு முக்கிய பிரச்சினையாக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்