ஆப்நகரம்

கடல் விமானச் சேவை: அக்டோபர் 31இல் தொடக்கம்!

அக்டோபர் 31ஆம் தேதி இந்தியாவின் முதல் கடல் விமானச் சேவை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Oct 2020, 7:14 pm
நீரிலும் நிலத்திலும் செல்லும் வகையில் விமானங்கள் தயாரிக்கப்பட்டு அவற்றின் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்த வகை கடல் விமானங்களை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக இயக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சார்பாக அக்டோபர் 31ஆம் தேதி இந்தியாவின் முதல் கடல் விமானம் இயக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த விமானத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. சர்தார் வல்லபாய் படேஎல் பிறந்ததினத்தை முன்னிட்டு குஜராத்தில் இச்சேவை தொடங்கப்படுகிறது.
Samayam Tamil seaplane


அகமதாபாத் சபர்மதி நதியில் காலை 10.15 மணிக்குப் புறப்படும் இந்த கடல் விமானம் குஜராத் கேவதியாவில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அருகில் 10.45க்கு சென்று சேரும். விமான ஓடுதளங்களை அமைக்க முடியாத இடங்களிலும் மிகவும் பின் தங்கிய இடங்களிலும் போக்குவரத்துச் சேவையை ஏற்படுத்தும் நோக்கத்தில் நதி வழியாக தரையிறங்கும் இந்த விமானச் சேவை தொடங்கப்படுகிறது. சென்ற ஞாயிற்றுக் கிழமையில்தான் மாலத்தீவுகளில் இருந்து கடல் விமானம் ஒன்று இந்தியாவில் தரையிறங்கியது. இதுதான் இந்தியாவில் தரையிறங்கும் முதல் கடல் விமானம் ஆகும்.

வெறும் ஒரு ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்... இது செம வாய்ப்பு!

ஸ்பெஸ்ஜெட் நிறுவனத்தின் கடல் விமானச் சேவை குறித்து குஜராத் காடுகள் மற்றும் சுற்றுச் சூழல் துறை முதன்மை செயலாளர் ராஜீவ் குமார் குப்தா கூறுகையில், “மாலத்தீவுகளின் மாலேவில் இருந்து தினமும் நான்கு முறை கடல் விமானம் கேவாதியாவுக்கு வந்து செல்லும். பிரதமர் மோடியின் உத்தரவுப்படி, இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கேவாதியாவை சர்வதேச அளவில் மிகப் பெரிய சுற்றுலாத் தலமாக மாற்றும் முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என்று கூறினார்.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஸ்பைஸ் ஷட்டில் நிறுவனம்தான் இந்த கடல் விமானங்களை முழுவதுமாக இயக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்