ஆப்நகரம்

ஏற்றுமதியில் கெத்து காட்டிய இந்தியா.. புதிய சாதனை!

கடந்த நிதியாண்டில் சரக்கு ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது.

Samayam Tamil 3 Apr 2022, 6:13 pm
2021-22ஆம் நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி வரலாறு காணாத அளவுக்கு 418 பில்லியன் டாலரை தொட்டுள்ளது. இதில் குறிப்பாக பெட்ரோலியப் பொருட்கள், எஞ்சினியரிங் பொருட்கள், நகைகள் மற்றும் ரத்தினக் கற்கள், ரசாயனம் ஆகிய சரக்குகள் மிக அதிகளவில் ஏற்றுமதியாகியுள்ளன.
Samayam Tamil export


மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல்படி, கடந்த மார்ச் மாதம் மட்டும் 40 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகியுள்ளன. 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 34 பில்லியன் டாலர் மதிப்புள்ள சரக்குகள் ஏற்றுமதியாகின.

2021ஆம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 292 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதியாகின. ஆனால், 2022ஆம் நிதியாண்டிலோ 418 பில்லியன் டாலர் மதிப்பிலான சரக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன. இது இதுவரையில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சாதனையாகும்.

முதலிடத்துக்கு தாவிய அதானி.. அதிர்ச்சியில் அம்பானி
ஏற்றுமதி வளர்ச்சிக்கு பெட்ரோலியம், பொறியியல், நகைகள், ரத்தினக் கற்கள், ரசாயனம், மருந்துகள் ஆகிய துறைகள் முக்கிய பங்கு வகித்துள்ளன. இத்துறைகளில் ஏற்றுமதி கணிசமாக வளர்ச்சி அடைந்துள்ளது.

அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சீனா, வங்கதேசம், நெதர்லாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து மிக அதிகமான சரக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்