பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களான ஆயில் இந்தியா கார்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் தற்போது 66,408 பெட்ரோல் நிலையங்களை இயக்கி வருகின்றன. தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 1,400 பெட்ரோல் நிலையங்களைக் கொண்டுள்ளது. மேலும், நயாரா எனர்ஜி நிறுவனம் 5,453 பெட்ரோல் நிலையங்களையும், ராயல் டட்ச் ஷெல் நிறுவனம் 167 பெட்ரோல் நிலையங்களையும் கொண்டுள்ளன.
பெட்ரோலியச் சந்தையில் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்தியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல பெட்ரோல் நிலையங்கள் அமைக்க முயற்சித்து வருகின்றன. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பத் தொகை ரூ.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனமானது ரூ.250 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
இனி வாகனக் கடன் ஈசியா வாங்கலாம்: அசோக் லேலண்ட்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் விவகாரத்தில் உயர்தர ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தது 100 பெட்ரோல் நிலையங்களை அமைக்க வேண்டும். அதில் 5 சதவீத பெட்ரோல் நிலையங்களைக் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும்.
உங்க சாப்பாடு சுத்தமா இருக்கா? ஆய்வில் திடுக்கிடும் தகவல்!
எங்கிருந்து பெட்ரோல், டீசல் பெறப்படுகிறது, உள்கட்டுமான வசதிகள், போக்குவரத்து அம்சங்கள், கொள்திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசிடம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி. நிறுவனம், சவுதி அரேபியாவின் அராம்கோ, ஃபிரான்ஸ் நாட்டின் டோட்டல் எஸ்.ஏ. உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளன.
பெட்ரோலியச் சந்தையில் மிக வேகமான வளர்ச்சியைக் கொண்டுள்ள இந்தியாவில் வெளிநாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பல பெட்ரோல் நிலையங்கள் அமைக்க முயற்சித்து வருகின்றன. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. பெட்ரோல் நிலையங்கள் அமைப்பதற்கான விண்ணப்பத் தொகை ரூ.25 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் பெட்ரோல் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனமானது ரூ.250 கோடி நிகர சொத்து மதிப்பைக் கொண்டிருக்க வேண்டும்.
இனி வாகனக் கடன் ஈசியா வாங்கலாம்: அசோக் லேலண்ட்
பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் விவகாரத்தில் உயர்தர ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்துகிறது. அதன்படி, இந்தியாவில் பெட்ரோல் நிலையம் அமைக்க விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தது 100 பெட்ரோல் நிலையங்களை அமைக்க வேண்டும். அதில் 5 சதவீத பெட்ரோல் நிலையங்களைக் கிராமப்புறங்களில் அமைக்க வேண்டும்.
உங்க சாப்பாடு சுத்தமா இருக்கா? ஆய்வில் திடுக்கிடும் தகவல்!
எங்கிருந்து பெட்ரோல், டீசல் பெறப்படுகிறது, உள்கட்டுமான வசதிகள், போக்குவரத்து அம்சங்கள், கொள்திறன் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசிடம் முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். தற்போதைய நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பி.பி. நிறுவனம், சவுதி அரேபியாவின் அராம்கோ, ஃபிரான்ஸ் நாட்டின் டோட்டல் எஸ்.ஏ. உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் பெட்ரோல் நிலையங்கள் அமைக்கும் பணியில் இறங்கியுள்ளன.