ஆப்நகரம்

கடல் உணவு ஏற்றுமதியில் மண்ணைக் கவ்விய இந்தியா!

சென்ற நிதியாண்டில் இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதி 7 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 20 Aug 2020, 5:48 pm
கடல் உணவு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற 2019-20 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து மொத்தம் 12,89,651 டன் அளவிலான கடல் உணவுகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.46,663 கோடியாகும். அதாவது டாலர் மதிப்பீட்டில் 6.68 பில்லியன் டாலர் ஆகும். இதன் மூலம் கடல் உணவு ஏற்றுமதியில் இந்தியா 7 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2018-19 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 13,92,559 டன் அளவிலான கடன் உணவுகள் ரூ.46,589 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. டாலர் மதிப்பீட்டில் 6.73 பில்லியன் டாலர்.
Samayam Tamil seafood


உறைய வைக்கப்பட்ட இறால்களும் உறைய வைக்கப்பட்ட மீன்களும்தான் சென்ற ஆண்டில் அதிகமான அளவில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதேபோல, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள்தான் இந்தியாவிலிருந்து அதிகமான அளவில் கடல் உணவுகளை இறக்குமதி செய்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 7 பில்லியன் டாலருக்கு மேல் கடல் உணவுகளை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும், சென்ற ஆண்டில் இலக்கை அடையமுடியவில்லை எனவும் கடல் உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் தலைவரான கே.எஸ்.ஸ்ரீனிவாஸ் கூறியுள்ளார்.

2 நிமிடத்தில் டிஜிட்டல் ஆதார் பெறுவது எப்படி?

இந்த ஆண்டில் கொரோனா பாதிப்பால் ஏப்ரல் மாதங்களில் ஏற்றுமதி பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அதைத் தொடர்ந்த மாதங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு ஏற்றுமதி மீண்டும் சூடுபிடித்துள்ளதாகவும், இந்த ஆண்டில் ஏற்றுமதி இலக்கை அடைந்துவிடலாம் எனவும் ஸ்ரீனிவாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்ற ஆண்டில் உறைய வைக்கப்பட்ட இறால்கள் 652 லட்சம் டன் அளவில் ரூ.34,152 கோடி மதிப்புக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவுக்கு 2.86 லட்சம் டன்னும், சீனாவுக்கு 1.46 லட்சம் டன்னும், ஐரோப்பிய யூனியனுக்கு 74,035 டன்னும், ஜப்பானுக்கு 38,961 டன்னும், தென் கிழக்கு ஆசியாவுக்கு 34,439 டன்னும், மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு 32,645 டன்னும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்