ஆப்நகரம்

பெட்ரோல் விலையின் அடுத்த ஆட்டம்.. அதுவும் இந்த வாரமே!

இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை.

Samayam Tamil 8 May 2022, 12:14 pm
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் - ரஷ்யா இடையே போர் தொடங்கியபோது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இதனால் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் விளைவாக பணவீக்கமும் உயர்ந்து விலைவாசி எகிறியது.
Samayam Tamil petrol


போர் பதற்றம் தணிந்தாலும் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து 100 டாலருக்கு மேல் நீடித்து வருகிறது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 6) அன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 1.3% அதிகரித்து 112.31 டாலராக உயர்ந்தது.

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மீது ஐரோப்பிய யூனியன் விதித்த தடை தொடர்ந்து நீடித்து வருவதால் விரைவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் எனவும், கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் அச்சம் எழுந்துள்ளது.

சீனியர் சிட்டிசன்களுக்கு அதிக பணம்.. புதிய வட்டி விகிதம் இதுதான்!
இந்த பதற்றத்தின் காரணமாக மே 6ஆம் தேதி கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இதுமட்டுமல்லாமல், இந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயருவதற்கான அறிகுறிகள் தெரிவதாக நிபுணர்களும், வர்த்தகர்களும் கூறுகின்றனர்.

இந்தியாவில் ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை பயங்கர உயர்வாக இருக்கிறது. அடுத்தகட்டமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மேலும் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்ந்தால் பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயரும். இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் சுமையும், நெருக்கடியும் ஏற்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்