ஆப்நகரம்

‘எங்களுக்கு வேற வழி தெரியல’... ஊழியர்களை வெளியேற்றும் இண்டிகோ!

10 விழுக்காடு ஊழியர்களை வெளியேற்றவுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 20 Jul 2020, 7:22 pm
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களில் 10 விழுக்காட்டினரை வெளியேற்றவுள்ளதாக அறிவித்துள்ளது.
Samayam Tamil இண்டிகோ


கொரோனா பாதிப்பால் பல தொழில்துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் விமானப் போக்குவரத்து துறையும் ஒன்று. இதனால் ஏராளமான விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் தொழிலை நடத்த முடியாமல் தற்காலிகமாக முடங்கியுள்ளன.

ஏர் இந்தியா நிறுவனம் தனது ஊழியர்களை ஐந்து ஆண்டுகள் வரை சம்பளம் இல்லா விடுப்பில் அனுப்ப திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. ஊரடங்கு காலத்திலும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் உள்நாட்டு விமானங்களை இயக்கி வந்தது. இந்நிலையில், கொரோனா நெருக்கடியால் 10% ஊழியர்களை வெளியேற்றவுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி ரொனோஜாய் தத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நாங்கள் இருக்கும் சூழலில், பொருளாதார நெருக்கடிக்கு இடையே நிறுவனத்தை நடத்துவது சாத்தியமற்றது. தொழிலை பாதுகாப்பதற்காக சில தியாகங்களை செய்தால் மட்டுமே நிறுவனம் இயங்க முடியும்.

ஆகவே, எல்லா சாத்தியக்கூறுகளையும் முழுமையாகவும் கவனமாகவும் ஆராய்ந்த பிறகு, நாங்கள் 10 விழுக்காடு ஊழியர்களை வெளியேற்றுவது என்ற தெளிவான முடிவுக்கு வந்திருக்கிறோம். இண்டிகோ நிறுவனத்தின் வரலாற்றில் முதல்முறையாக இத்தகைய வர்த்தமான முடிவை எடுத்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் மொத்தம் 23,531 ஊழியர்கள் பணிபுரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்