ஆப்நகரம்

தமிழகத்தில் ரூ.15610.43 கோடிக்கு தொழில் முதலீடுகள்.. அமைச்சரவை கிரீன் சிக்னல்!

தமிழகத்தில் 15,610.43 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 4 Jan 2023, 6:14 pm
தமிழகத்தில் 15,610.43 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil thangam thennarasu
thangam thennarasu


தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஜனவரி 4) காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதல்வர், அமைச்சர்கள், தலைமை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். வரும் ஜனவரி 9ஆம் தேதி சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது.

இந்த சூழலில், புதிய அறிவிப்புகள், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதில் மகளிருக்கான 1000 ரூபாய் ஊக்கத்தொகை, மதுபானங்களின் விலை உயர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு பென்சன் திட்டம்.. வட்டி விகிதம் அறிவிப்பு!
அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் 15,610.43 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய தொழில் முதலீடுகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய தொழில் முதலீடுகள் வாயிலாக சுமார் 8726 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். போச்சம்பள்ளி, தேனி, புதுக்கோட்டை, சென்னையை ஒட்டி உள்ள பகுதிகளில் இந்த முதலீடுகள் வருகின்றன.

எட்டு புதிய திட்டங்களை செயல்படுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தொழில்துறைக்கு மேலும் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் வகையில் அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. மின்சார வாகன உற்பத்திக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தென் தமிழ்நாட்டில் ஏராளமான முதலீடுகள் வந்துள்ளன. பரந்தூரில் வரவிருக்கும் விமான நிலையத்தை ஒட்டி ஏற்கெனவே தொழில் பூங்காக்கள் இருக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்