இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் தலைமை நிதி அதிகாரியான ராஜீவ் பன்சாலுக்கு ரூ. 12.20 கோடி வழக்குமாறு நடுவர் நீதிமன்றம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராஜிவ் பன்சால். கடந்த 2015 தனது பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவருக்கு நிறுவனங்கள் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்தால், 24 மாதங்களுக்கான ரூ. 17.38 கோடி சம்பளத்தை நிறுவனம் கொடுக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ. 5 கோடி மட்டுமே இன்போசிஸ் நிறுவனம் வழங்கி இருந்தது. மீதப் பணத்தைக் கொடுக்க இன்போசிஸ் நிறுவனம் இழுத்தடித்து. இதையடுத்து நடுவர் தீர்ப்பாயத்தில் பன்சால் வழக்கு தொடுத்தார்.
இதற்கு பதிலடியாக இன்போசிஸ் நிறுவனமும் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், ''நம்பிக்கை ஒப்பந்தத்தை மீறியதால் நிறுவனத்துக்கு இழப்பீடாக பன்சால் ரூ. 100 கோடி வழங்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது. ''அலுவலகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து சில டேடாக்களை பன்சால் நீக்கிவிட்டார்'' என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் பன்சாலுக்கு மீதத் தொகையான ரூ. 12.20 கோடியை வழங்குமாறு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் ராஜிவ் பன்சால். கடந்த 2015 தனது பணியை ராஜினாமா செய்தார். இதையடுத்து இவருக்கு நிறுவனங்கள் சட்டத்தின்படி பணியில் இருந்து ராஜினாமா செய்தால், 24 மாதங்களுக்கான ரூ. 17.38 கோடி சம்பளத்தை நிறுவனம் கொடுக்க வேண்டும். ஆனால், வெறும் ரூ. 5 கோடி மட்டுமே இன்போசிஸ் நிறுவனம் வழங்கி இருந்தது. மீதப் பணத்தைக் கொடுக்க இன்போசிஸ் நிறுவனம் இழுத்தடித்து. இதையடுத்து நடுவர் தீர்ப்பாயத்தில் பன்சால் வழக்கு தொடுத்தார்.
இதற்கு பதிலடியாக இன்போசிஸ் நிறுவனமும் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில், ''நம்பிக்கை ஒப்பந்தத்தை மீறியதால் நிறுவனத்துக்கு இழப்பீடாக பன்சால் ரூ. 100 கோடி வழங்க வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டது. ''அலுவலகத்தின் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து சில டேடாக்களை பன்சால் நீக்கிவிட்டார்'' என்றும் இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் பன்சாலுக்கு மீதத் தொகையான ரூ. 12.20 கோடியை வழங்குமாறு நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.