ஆப்நகரம்

உள்கட்டுமானத் துறையைத் தாக்கிய கொரோனா!

கொரோனா பாதிப்பால் நவம்பர் மாதத்திலும் உள்கட்டுமானத் துறை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

Samayam Tamil 1 Jan 2021, 8:26 pm
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மார்ச் மாத இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டன. தொழில் துறை உற்பத்தி முடங்கியது. அதன் பின்னர், மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு, இந்தியப் பொருளாதார வீழ்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. சில கட்டுப்பாடுகளுடன் தொழில் துறை உற்பத்தி தொடங்கியது. இருந்த போதிலும் கொரோனாவுக்கு பின்னர் உற்பத்தியில் இயல்பு நிலை திரும்பவில்லை.
Samayam Tamil core


மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சென்ற நவம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கியத் துறைகளின் உற்பத்தி 2.6 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புப் பொருட்கள், எஃகு, சிமெண்ட் ஆகிய துறைகளில் ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சியால்தான் ஒட்டுமொத்த உள்கட்டுமானத் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதோடு, தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக உள்கட்டுமானத் துறையில் வீழ்ச்சி நீடிக்கிறது. 2019 நவம்பர் மாதத்தில் உள்கட்டுமானத் துறை 0.7 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது.

வீடு கட்ட மானியம்: விண்ணப்பிப்பது எப்படி?

நிலக்கரி, உரம், மின்சாரம் ஆகிய துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் - நவம்பர் காலத்தில் உள்கட்டுமானத் துறை 11.4 சதவீதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. 2019 ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் 0.3 சதவீத வளர்ச்சி இருந்தது. 2020 நவம்பர் மாதத்தில், கச்சா எண்ணெய் உற்பத்தி 4.9 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 9.3 சதவீதமும், சுத்திகரிப்புப் பொருட்கள் உற்பத்தி 4.8 சதவீதமும், எஃகு உற்பத்தி 4.4 சதவீதமும், சிமெண்ட் உற்பத்தி 7.1 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளது. மகிழ்ச்சியூட்டும் செய்தியாக, நிலக்கரி உற்பத்தி 2.9 சதவீதமும், மின்சார உற்பத்தி 2.2 சதவீதமும், உரம் உற்பத்தி 1.6 சதவீதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்