ஆப்நகரம்

இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் பேஸ்புக்கில் இருந்து ராஜினாமா!!

இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதன் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீஜெர் இருவரும் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர்.

Samayam Tamil 25 Sep 2018, 1:26 pm
இன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதன் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீஜெர் இருவரும் விரைவில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் ராஜினாமா!!
இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் ராஜினாமா!!


இதுகுறித்து கெவின் சிஸ்ட்ரோம் விடுத்து இருக்கும் அறிக்கையில், ''மைக்கும், நானும் கடந்த எட்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திலும், கடந்த ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளோம். இதை உயர்வாக நினைக்கிறோம். எங்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் எதிர்காலத்திற்கு தேவையான புதிய யுக்திகளுடன் களத்தில் இறங்குவோம். நாட்டுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் வெளியிட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி ஃபோர்ப்ஸ் வெளியிட்டு இருக்கும் செய்தியில், சிஸ்ட்ரோமின் சொத்து மதிப்பு 1.4 பில்லியன் டாலர் என்று தெரிவித்துள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு புகைப்படங்களை பகிரும் ஆப்பை பேஸ்புக் நிறுவனம் வாங்கி இருந்தது. இதில் இருந்துதான் இவர்கள் இருவரும் தற்போது விலகியுள்ளனர்.

கடந்த 2012ஆம் ஆண்டில் இன்ஸ்டாகிராம் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கி இருந்தது. அப்போது அதன் மதிப்பு ஒரு பில்லியன் டாலராக இருந்தது. கடந்த ஜூன் மாதம் ஒரு மில்லியன் பார்வையாளர்களை இன்ஸ்டாகிராம் கடந்து இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது. பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப், மெசஞ்சர் சமூக தளங்களை அடுத்து ஒரு மில்லியன் பார்வையாளர்களை இன்ஸ்டாகிராம் கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக் தலைமைக்கும், இன்ஸ்டாமிராம் இணை நிறுவனர்களுக்கும் இடையே புகைப்பட பகிர்வு ஆப் தொடர்பான சுய அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் சிக்கல் நீடித்து அதனால் அவர்கள் இருவரும் வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்