ஆப்நகரம்

LIC Loss: எல்ஐசி நிறுவனத்துக்கு ரூ.50,000 கோடி நஷ்டம்.. அதானி பங்குகள் சரிவால் இழப்பு!

அதானி பங்குகள் சரிவால் எல்ஐசி நிறுவனம் சுமார் 50000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக தகவல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 24 Feb 2023, 1:49 pm
Samayam Tamil LIC
LIC
அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்துகொண்டே வருகின்ற நிலையில், அதானி பங்குகள் சரிவால் எல்ஐசி (LIC) நிறுவனம் சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன.

அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து, அதானி நிறுவனங்களின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன.

அதானி நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் பல்லாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. எல்ஐசி முதலீடுகளில் இந்திய மக்களின் பணமும் இருப்பதால், இவ்விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. எனினும், சில வாரங்களுக்கு முன் அதானி பங்குகள் சரிவால் எல்ஐசி நிறுவனத்துக்கு பெரிய நஷ்டம் இல்லை என கூறப்பட்டது.

இந்நிலையில், அதானி பங்குகளின் தொடர் சரிவால் எல்ஐசி நிறுவனம் தற்போது சுமார் 50,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக மதிப்பீடுகள் கூறுகின்றன. அதானி சரிவால் எல்ஐசி நிறுவனம் 49,728 கோடி ரூபாய் நஷ்டத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதானி குழுமத்தை சேர்ந்த அதானி எண்டர்பிரைசஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அதானி ட்ரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், ஏசிசி ஆகிய நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி அதானி நிறுவனங்களில் எல்ஐசி செய்த முதலீடுகளின் மதிப்பு 82,970 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 23) நிலவரப்படி அதானி நிறுவனங்களில் எல்ஐசி முதலீடுகளின் மதிப்பு 33,242 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

எனவே, அதானி பங்குகள் சரிவால் எல்ஐசி நிறுவனம் 49,728 கோடி ரூபாய் நஷ்டத்தில் உள்ளது. இன்று பங்கு வர்த்தகத்திலும் அதானி நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் பல்வேறு அதானி நிறுவனங்களின் பங்குகள் 70% மேல் சரிந்துவிட்டன.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்