ஆப்நகரம்

Intel Layoff: இண்டெல் நிறுவனத்தின் அடுத்தகட்ட பணிநீக்கம்.. அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்!

இண்டெல் நிறுவனம் அதன் 20% ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளது.

Samayam Tamil 9 May 2023, 5:13 pm
சமீபத்தில் ஐடி துறைகளில் ஊழியர்கள் பணிநீக்கம் என்பது ஒரு முடிவில்லாமல் செல்லும் நிலையில், மற்ற துறைகளும் அதன் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது.
Samayam Tamil intel payoff


சவாலான பொருளாதார மந்தநிலை, செலவுகளை குறைத்தல் போன்ற காரணங்களுக்காக நிறுவனங்கள் அதன் ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து வருகின்றன.

அந்த வரிசையில் இண்டெல் நிறுவனம் அதன் நிறுவனத்தின் செலவுகளை கட்டுப்ப்படுத்துவதற்காக இரண்டாம் கட்ட பணிநீக்க அறிவிப்புக்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி Intel நிறுவனத்தின் 20% ஊழியர்கள் அடுத்து பணிகளை இழக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சரியான எண்ணிக்கையை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

நிறுவனம் USA today செய்தி தாளுக்கு அளித்த பேட்டியில் ”இண்டெல் நிறுவனம் தற்போது கடினமான மேக்ரோ-பொருளாதார சூழ்நிலையை எதிர்கொள்வதால், நிதி நிலையை சீர்செய்யும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளது” என இண்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும் செமிகண்டக்டர் மேஜர் அதன் கிளையன்ட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர் பிரிவுகளில் 20 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இண்டெல் நிறுவனம் அதன் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கடந்த ஜனவரி மாதம் சுமார் 22,000 பணியாளர்களை புதிதாக இண்டெல் நிறுவனம் பணியமர்த்துவதாகவும் செய்திகல் பரவின. ஆனால் இப்போது பணிநீக்க அறிவிப்புகள் வந்த வண்னம் உள்ளதால், ஊழியர்கள் பலர் அச்சத்தில் உள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்