ஆப்நகரம்

95 ரூபாய் இருந்தால் போதும்... ரூ.14 லட்சம் சம்பாதிக்கலாம்!

தபால் நிலையத்தில் தினசரி 95 ரூபாய் சேமிப்பில் 14 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம்.

Samayam Tamil 15 Jun 2021, 5:45 pm
நீங்கள் பணத்தைச் சேமிக்க தபால் நிலையங்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தியத் தபால் துறையானது வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க பல்வேறு முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் என வருமான வரி விலக்கு அளிக்கக் கூடிய சேமிப்பு திட்டங்களையும் தபால் நிலையங்கள் செயல்படுத்தி வருகின்றன. இதுபோன்ற திட்டங்கள் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
Samayam Tamil savings


நீங்கள் ஒரு நாளைக்கு 95 ரூபாய் சேமித்தாலே உங்களுக்கு ரூ.14 லட்சம் வரையில் லாபம் தரும் திட்டம் தபால் நிலையங்களில் செயல்பாட்டில் உள்ளன. Gram Sumangal Rural Postal Life Insurance என்ற இத்திட்டம் 1995ஆம் ஆண்டில் மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டம் 15 மற்றும் 20 ஆண்டுகள் முதிர்வு கொண்டது. 19 வயது முதல் 45 வயது வரை உள்ள எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தின் கீழ் பாலிசி எடுக்கலாம். இத்திட்டத்தில் அதிகபட்சம் ரூ.20 லட்சம் வரையில் ரிட்டன் கிடைக்கும்.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கலயா? பெரிய ஆபத்து வருது!
ஒருவர் இந்த பாலிசியை தனது 25ஆவது வயதில் வாங்கினால் வருடத்துக்கு ரூ.32,735 பிரீமியம் செலுத்த வேண்டும். ஆறு மாதங்களுக்கு பிரீமியம் செலுத்துவதாக இருந்தால் ரூ.16,715 செலுத்த வேண்டும். அதேபோல மூன்று மாதங்களுக்கு ரூ.8,449 மற்றும் ஒரு மாதத்துக்கு ரூ.2,853 செலுத்த வேண்டும். அதாவது ஒரு நாளைக்கு ரூ.95 செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் போனஸ் தொகையும் கிடைக்கும். ஒரு ஆண்டுக்கு 1000 ரூபாய்க்கு ரூ.48 போனஸ் கிடைக்கும். போனஸ் உத்தரவாதத் தொகை ரூ.7 லட்சமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்