ஆப்நகரம்

பண மழை கொட்டுது.. ஓடிப் போய் அள்ளிட்டு வாங்க!

உடனே போஸ்ட் ஆபீஸ் போங்க!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 30 Nov 2022, 1:20 pm
தபால் நிலையத்தில் உள்ள இந்தத் திட்டத்தில் நீங்கள் பணம் போட்டால் சில காலத்திலேயே பல லட்சம் சம்பாதிக்கலாம்.
Samayam Tamil invest in this post office scheme to get higher return
பண மழை கொட்டுது.. ஓடிப் போய் அள்ளிட்டு வாங்க!


​தபால் நிலைய சேமிப்பு!

வங்கிகள் போலவே பொதுமக்களின் சேமிப்புப் பழக்கத்தினை ஊக்குவிக்க இந்தியத் தபால் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்களின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களது முதலீடு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். அதோடு அதிக லாபமும் கிடைக்கும். பங்குச் சந்தை முதலீடு போன்ற ரிஸ்க் எதுவும் இதில் கிடையாது.

​சூப்பரான திட்டம்!

ரிஸ்க் இல்லாத நல்ல லாபத்தை எதிர்பார்த்து முதலீடு செய்பவர்களுக்கு ரெக்கரிங் டெபாசிட் (RD) திட்டம் நல்ல தேர்வாக இருக்கும். இத்திட்டத்தின் கீழ் நிலையான வட்டி வருமானம் கிடைப்பதோடு உங்களுடைய சேமிப்புப் பணமும் பாதுகாப்பாக இருக்கும். மாதத்துக்கு ரூ.10,000 வரையில் சேமித்து குறுகிய காலத்தில் லட்சாதிபதி ஆகிவிடலாம்.

​நிபந்தனைகள்!

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் நீங்கள் அடுத்த 5-5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக்கொள்ளலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் தினசரி 100 ரூபாய் சேமித்தால் கூட போதும். அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் இல்லை. ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தற்போது ஆண்டுக்கு 5.8 சதவீத வட்டி கிடைக்கிறது.

​லாபம் எவ்வளவு?

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் தினமும் நீங்கள் 333 ரூபாய் என்ற அளவில் முதலீடு செய்தாலே 16 லட்சத்துக்கு மேல் சம்பாதிக்கலாம். அதாவது ஒரு மாதத்துக்கு ரூ.10,000 சேமித்தால் இத்திட்டத்தின் முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ.16.28 லட்சம் கிடைக்கும். 10 ஆண்டுகளில் இந்த இலக்கை நீங்கள் அடைய முடியும்.

​கணக்கு தொடங்குவது சுலபம்!

இத்திட்டத்தின் கீழ் நீங்கள் தனி கணக்காகவோ அல்லது இணைப்பு கணக்காகவோ தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தை பெயரிலும் இத்திட்டத்தில் கணக்கு தொடங்க முடியும். அதேபோல, உங்களுடைய கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து மற்றொரு தபால் நிலையத்துக்கு மாற்றும் வசதியும் உள்ளது.

​கடன் பெறலாம்!

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் கடன் பெறவும் முடியும். கடன் வாங்க விரும்பினால், உங்கள் தபால் அலுவலகக் கிளையைத் தொடர்பு கொள்ளலாம். இந்தக் கடனை 12 தவணைகளில் டெபாசிட் செய்யலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகையில் 50% கடன் பெறும் வசதி உள்ளது.

​அதிக லாபம்!

ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.6,000 அதாவது ரூ.200 டெபாசிட் செய்தால், 90 மாதங்களுக்குப் பிறகு அதாவது 7.5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.6.76 லட்சத்துக்கும் அதிகமான தொகையைப் பெறுவீர்கள். இவ்வாறு ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்