ஆப்நகரம்

ரேகா ஜுன்ஜுன்வாலா வாங்கிய புதிய பங்கு.. உங்களிடம் இருக்கா?

பிரபல முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுன்வாலா (Rekha Jhunjhunwala) புதிதாக ஸ்மால் கேப் பங்கு ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 17 Apr 2023, 4:24 pm
பிரபல பங்கு சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா உடல்நலக் குறைவால் கடந்த ஆண்டு காலமானார். இதைத்தொடர்ந்து அவரின் சொத்துகள் மற்றும் முதலீடுகளை அவரின் மனைவி ரேகா ஜுன்ஜுன்வாலா கவனித்து வருகிறார்.
Samayam Tamil rekha jhunjhunwala
rekha jhunjhunwala


அண்மையில் ரேகா ஜுன்ஜுன்வாலா வைத்துள்ள பங்குகள் நல்ல வளர்ச்சி கண்டு அவருக்கு லாபத்தை கொடுத்துள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் காலாண்டில் ரேகா ஜுன்ஜுன்வாலா புதிதாக ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் (Raghav Productivity Enhancers) பங்குகளில் முதலீடு செய்துள்ளார்.

இதன்படி, ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் நிறுவனத்தில் 5.23% பங்குகளை ரேகா ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார். அதாவது ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் நிறுவனத்தின் சுமார் 6 லட்சம் பங்குகளை ரேகா ஜுன்ஜுன்வாலா வாங்கியுள்ளார்.

ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் நிறுவனத்தில் ஏற்கெனவே பிரபல முதலீட்டாளர்களான ஆஷிஷ் கச்சோலியா 2.02% பங்குகளையும், முகுல் அகர்வால் 1.55% பங்குகளையும் வைத்திருக்கின்றனர். இந்நிலையில், இதே நிறுவனத்தில் ரேகா ஜுன்ஜுன்வாலாவும் முதலீடு செய்துள்ளார்.

ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் நிறுவனம் ramming mass பொருளை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், உலகின் மிகப்பெரிய ramming mass உற்பத்தியாளர்களில் ஒரு முக்கிய நிறுவனமாகவும் ராகவ் இருக்கிறது. ramming mass என்பது ஸ்டீல் நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் பொருளாகும்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் பங்கு விலை 831% உயர்ந்துள்ளது. கடந்த ஒரு ஆண்டில் கூட இந்த பங்கு 50% உயர்ந்துள்ளது. இன்றும் இந்த பங்கு விலை 4% அதிகரித்து 899 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ராகவ் புரொடக்டிவிட்டி என்ஹான்சர்ஸ் பங்கில் முதலீடு செய்தது மட்டுமல்லாமல் டைட்டன் (Titan) நிறுவனத்திலும் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளார் ரேகா ஜுன்ஜுன்வாலா. ஏற்கெனவே டைட்டன் நிறுவனத்தில் ரேகாவுக்கு 5.17% பங்கு இருந்தது. இந்நிலையில், டைட்டனில் தனது பங்கை 5.30% ஆக உயர்த்தியுள்ளார் ரேகா ஜுன்ஜுன்வாலா.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்