ஆப்நகரம்

ரயில் டிக்கெட் கேன்சல்.. பயணிகளுக்கு முக்கியமான அப்டேட்!!

ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. ரீஃபண்ட் கிடைப்பதில் பிரச்சினை இல்லை...

Samayam Tamil 28 Feb 2022, 3:10 pm
இந்தியாவில் இப்போது தினமும் கோடிக் கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கின்றனர். பேருந்து, விமானம், டாக்ஸி போன்ற போக்குவரத்து பயணங்களை விட ரயில் பயணங்கள் பொதுமக்களுக்கு சௌகரியமாக இருப்பதோடு, விரைவாகவும் பயணிக்க முடியும். டிக்கெட் கட்டணமும் குறைவுதான். இதனால் பெரும்பாலானோர் ரயில் பயணங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
Samayam Tamil irctc


ரயிலில் பயணம் செய்பவர்களில் அதிலுள்ள முக்கியமான விதிமுறைகள் குறித்து தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். நிறையப் பேர் ரயில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு சில காரணங்களுக்காக அதை கேன்சல் செய்துவிடுவார்கள். முன்கூட்டியே கேன்சல் செய்தால் அதற்கு ரீஃபண்ட் தொகை கிடைக்கும். ஆனால் கடைசி நேரத்தில் கேன்சன் செய்யும் போது பல நேரங்களில் ரீஃபண்ட் தொகை கைக்கு வராது. இதனால் நிறையப் பேர் கேன்சல் செய்யாமல் கூட விட்டுவிடுவார்கள்.

ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை.. இந்த தப்புக்கு ஜெயில் கன்ஃபார்ம்!

உண்மையில், ரயில் பயணத்துக்கான சார்ட் தயாரித்த பின்னர் கூட கேன்சன் செய்தால் ரீஃபண்ட் கிடைக்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. சில காரணங்களுக்காக ரயில் டிக்கெட் கேன்சல் செய்யும்போது அதற்கான ரீஃபண்ட் தொகையை கிளைம் செய்து வாங்கும் வசதி உள்ளது. இதுகுறித்த விளக்கத்தை ஒரு வீடியோவுடன் IRCTC தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், ரீஃபண்ட் தொகைக்கான டிக்கெட் டெபாசிட் ரசீது (TDR) எப்படி சமர்ப்பிப்பது என்று விளக்கியுள்ளது.

அதற்கு முதலில் IRCTC வெப்சைட்டில் செல்ல வேண்டும். www.irctc.co.in

ஹோம் பேஜில் உள்ள ‘My account' என்ற வசதியில் சென்றால் My transaction என்ற ஒரு ஆப்சன் இருக்கும், அதை கிளிக் செய்யவும். அதில் சென்றால் TDR சமர்ப்பிக்கும் வசதி இருக்கும்.

ரயில் டிக்கெட் புக்கிங் செய்த நம்பரின் விவரங்கள், PNR நம்பர், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை பதிவிட்டு 'submit' கொடுக்க வேண்டும்.

முடிவில் உங்களுக்கு எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும் போன்ற விவரங்களை நீங்கள் பார்க்க முடியும். இதற்கான உறுதிப்படுத்தும் தகவல் SMS மூலமாக அனுப்பப்படும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்