ஆப்நகரம்

ரயில் டிக்கெட் கேன்சல்.. எவ்வளவு ரீஃபண்ட் கிடைக்கும்? முழு விவரம் இதோ..!

டிக்கெட் சேன்சல் தொடர்பான IRCTCயின் விதிமுறை இதுதான். இது தெரியாம கேன்சல் பண்ணாதீங்க!

Samayam Tamil 13 Mar 2022, 3:54 pm
நீங்கள் ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும்போது நெட்வொர்க் அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கிக் கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுவிடும். ஆனால் டிக்கெட் புக்கிங் ஆகியிருக்காது. அப்போது என்ன செய்வீர்கள்? இதுகுறித்த IRCTC விதிமுறை என்னவென்றால் டிக்கெட் கட்டணத்துக்கான முழுத் தொகையும் உங்களுடைய கணக்கில் ரீஃபண்ட் செய்யப்பட்டுவிடும். எனவே கவலைப்பட தேவையில்லை.
Samayam Tamil irctc


டிக்கெட் புக்கிங் செய்து அது கன்பார்ம் ஆகிவிட்டால் அதற்கான கேன்சல் ரீஃபண்ட் வெவ்வேறு அளவில் உள்ளது. கேன்சல் செய்யும் நேரம் மற்றும் பெட்டியின் வகையைப் பொறுத்து ரீஃபண்ட் தொகை மாறுபடும். வண்டி கிளம்புவதற்கு 48 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதற்கான கேன்சல் தொகை கீழ்க்கண்ட அளவில் இருக்கும்.

ஏசி பர்ஸ்ட் / எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் = ரூ.240 மற்றும் ஜிஎஸ்டி

ஃபர்ஸ்ட் கிளாஸ் / ஏசி 2 டைடர் = ரூ.200 மற்றும் ஜிஎஸ்டி

ஏசி சேர் கார் / ஏசு 3 டையர் / ஏசி 3 எகானமி = ரூ.180 மற்றும் ஜிஎஸ்டி

ஸ்லீப்பர் கிளாஸ் = ரூ.120

செகேண்ட் கிளாஸ் = ரூ.60

ரயில் டிக்கெட் புக்கிங்.. லோயர் பெர்த் கிடைக்க என்ன செய்வது?

ஒருவேளை ரயில் புறப்படுவதற்கு முன்னர் 24 மணி நேரம் முதல் 12 மணி நேர இடைவெளியில் டிக்கெட்டை கேன்சல் செய்தால் டிக்கெட் கட்டணத்தில் 25 சதவீதமும் ஜிஎஸ்டியும் சேர்த்து பிடித்தம் செய்யப்படும்.

ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரையில் டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டால் 50 சதவீத டிக்கெட் கட்டணமும் ஜிஎஸ்டியும் சேர்த்து வசூலிக்கப்படும். பிடித்தம் செய்யப்பட்ட தொகை போக எஞ்சிய பணம் அக்கவுண்டில் வந்து சேரும்.

ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்துக்குள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் ரீஃபண்ட் எதுவும் கிடையாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்