ஆப்நகரம்

Insurance: பாலிசிதாரர்களுக்கு ஆட்டோமேட்டிக் செட்டில்மெண்ட்.. ரெடியாகிறது புதிய திட்டம்!

இன்சூரன்ஸ் பாலிசிதாரர்களுக்கு ஆட்டோமேட்டிக்காக செட்டில்மெண்ட் வழங்குவதற்கு புதிய தொழில்நுட்பத்தை தயர் செய்ய IRDAI திட்டம்.

Samayam Tamil 16 Aug 2022, 1:26 pm
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆட்டோமேட்டிக்காக காப்பீட்டு தொகை செட்டில்மெண்ட் செய்வதற்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI அழைப்பு விடுத்துள்ளது.
Samayam Tamil insurance


உயிரிழந்த பாலிசிதாரர்களின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு தொகை செலுத்துபோது சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு தவறாகவும் பணம் செலுத்தப்பட்டுவிடுகிறது. இன்சூரன்ஸ் செட்டில்மெண்ட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க IRDAI திட்டமிட்டுள்ளது.

இதற்காக, உயிரிழந்த பாலிசிதாரர்களின் குடும்பத்தினருக்கு ஆட்டோமேட்டிக்காக செட்டில்மெண்ட் தொகை செலுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க IRDAI முடிவு செய்துள்ளது. இதற்காக Bima Manthan 2022 என்ற ஹேக்கதான் போட்டியை IRDAI அறிவித்துள்ளது.

சுதந்திர தினம்.. ரூ.500 கோடிக்கு தேசிய கொடி விற்பனை!
ஒவ்வொரு பாலிசிதாரரின் நலனை பாதுகாப்பது, தொழில்நுட்பத்தை முழுவதுமாக பயன்படுத்தி ஒவ்வொரு நபருக்கும் இன்சூரன்ஸ் கிடைக்க வழிவகை செய்வது ஆகியவற்றுக்கு தொழில்நுட்பத்தை உருவாக்குவதே இந்த ஹேக்கதான் போட்டியின் நோக்கம் என IRDAI தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பாலிசிதாரர்களின் குடும்பங்களுக்கு ஆட்டோமேட்டிக்காக செட்டில்மெண்ட் வழங்குவது, இன்சூரன்ஸ் பாலிசிகளை தவறாக விற்பனை செய்வதை தடுப்பது போன்றவற்றுக்கு புதிய ஐடியாக்கள், தொழில்நுட்பங்களை உருவாக்கும்படி IRDAI அறிவுறுத்தியுள்ளது.

இதுபோக மோட்டார் இன்சுரன்ஸ் திட்டங்களில் மோசடியை தவிர்க்க தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் எனவும் IRDAI ஆய்வு செய்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்