விருதுநகர் மாவட்டம் சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 35 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கம் மற்றும் 175 கிராம் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தன.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இக்கோவிலில் இன்று பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை மாதம் தோறும் எண்ணுவது வழக்கம் இந்த சூழலில் இன்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 35 லட்சம் ரூபாய் காணிக்கை இன்று கிடைத்துள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ள 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில் ரொக்கமாக 35 லட்சத்து 37 ஆயிரத்து 345 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது.
இந்தக் காணிக்கை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதுபோக தங்கம் 175 கிராமும், வௌ்ளி 355 கிராமும் கிடைத்தது. பணம் எண்ணிக்கையின் போது சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம் சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காணிக்கை எண்ணும் பணியை ஆய்வுக்கு மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில் இக்கோவிலில் இன்று பக்தர்கள் வழங்கிய காணிக்கைகளை மாதம் தோறும் எண்ணுவது வழக்கம் இந்த சூழலில் இன்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்று வந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 35 லட்சம் ரூபாய் காணிக்கை இன்று கிடைத்துள்ளது.
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உள்ள 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல், ஒரு அன்னதானம் உண்டியல் ஆகியவை திறக்கப்பட்டு பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டன. அதில் ரொக்கமாக 35 லட்சத்து 37 ஆயிரத்து 345 ரூபாய் பக்தர்களின் காணிக்கையாக கிடைத்தது.
இந்தக் காணிக்கை கோயிலின் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டது. இதுபோக தங்கம் 175 கிராமும், வௌ்ளி 355 கிராமும் கிடைத்தது. பணம் எண்ணிக்கையின் போது சாத்தூர், துலுக்கப்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்த ஓம் சக்தி பக்தர் குழு மற்றும் தன்னார்வலர்கள் கோயில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
காணிக்கை எண்ணும் பணியை ஆய்வுக்கு மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன் தலைமையில் கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழுவினர், ஆய்வாளர்கள், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.