ஆப்நகரம்

3500 ரூபாய் தரும் மத்திய அரசு? உண்மை நிலவரம் என்ன?

மத்திய அரசின் ஒரு திட்டத்தில் பொதுமக்களுகு 3500 ரூபாய் நிதியுதவி கிடைக்கும் என்ற தகவல் பரவி வருகிறது.

Samayam Tamil 3 Feb 2022, 12:27 pm
நாட்டு மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பிஎம் கிசான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இதில் அடங்கும். அதேபோல, வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. ஆனால் இப்போது மத்திய அரசின் ஒரு திட்டம் குறித்த வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
Samayam Tamil fact check


அதாவது, பிரதான் மந்திரி பிரோஜ்கார் பட்டா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் நாட்டு மக்களுக்கு மத்திய அரசு 3500 ரூபாய் வழங்குவதாகவும், இதுவொரு வேலைவாய்ப்பு திட்டம் எனவும் கூறப்படுகிறது.

ஆனால் இச்செய்தி உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிஐபி ஃபேக்ட் செக் மூலமாக இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இப்படி ஒரு திட்டமே இல்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இதுபோன்ற செய்திகள் வாடிக்கையாளர்களுக்கு வந்தால் அதை நம்ப வேண்டாம் எனவும், அதில் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


வாட்ஸ் ஆப்பில் இது தொடர்பாகப் பரவி வரும் செய்தியில், “ வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மத்திய அரசு பிரதான் மந்திரி பிரோஜ்கார் பட்டா யோஜனா 2022 என்ற திட்டத்தின் கீழ் மாதத்துக்கு ரூ.3500 நிதியுதவி வழங்குகிறது. அதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து மொபைல் நம்பரைப் பதிவிட்டு ரிஜிஸ்டர் செய்யவும்” என்று உள்ளது.

இதுபோன்ற போலியான தகவல்கள் சமீப நாட்களாகவே வாட்ஸ் ஆப் போன்ற சமூக ஊடகங்களில் அதிகமாகவே பரவி வருகின்றன. அதுவும் பட்ஜெட் தாக்கல் சமயத்தில் இந்த வேலைவாய்ப்பு நிதியுதவித் திட்டம் தொடர்பான செய்தி பரவியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்