ஆப்நகரம்

மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. மத்திய அரசின் திட்டம்.. வெளியான உண்மை!

மத்திய அரசு சார்பாக மாணவர்களுக்கு இலவச லேப்டாப் தரும் திட்டம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மை இதுதான்..!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 19 Mar 2023, 1:33 pm
இந்தியாவில் இப்போது பெரும்பாலான மக்களின் தேவையாக ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் மாறிவிட்டன. கடந்த காலங்களில் பல்வேறு மாநில அரசுகள் சார்பில் டேப்லெட்டுகள் மற்றும் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற சூழலில் கடந்த சில நாட்களாகவே இது தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த செய்தியில், இளைஞர்களுக்கு இந்திய அரசு இலவச மடிக்கணினிகளை வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil free laptop


'பிரதான் மந்திரி இலவச லேப்டாப் திட்டம் 2023' என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக அந்த வைரல் செய்தியில் கூறப்பட்டுள்ளது. ஆனால் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் இந்த செய்தி பற்றி PIB சார்பாக உண்மை சரிபார்ப்பு செய்யப்பட்டபோது, இந்த செய்தி முற்றிலும் போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. இப்படி ஏதேனும் ஒரு செய்தி உங்களுக்கு வந்திருந்தால், அதன் உண்மைத் தன்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது முற்றிலும் போலியாக பரப்பப்பட்ட செய்தியாகும்.

மத்திய அரசு சார்பாக இப்படி எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை. PIB உண்மை சரிபார்ப்பு செய்த பின்னரே இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. உண்மைச் சரிபார்ப்பின் அடிப்படையில், கல்வித் துறையால் அத்தகைய திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ உண்மைச் சரிபார்ப்பு 'PIB Fact Check' இதுபோன்ற தவறான செய்திகளை அனுப்ப வேண்டாம் என்று மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த செய்தியில், ”இளைஞர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதாக கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. இந்த அறிவிப்பில், 11, 12, பிஏ ஆகிய வகுப்புகளின் ஒவ்வொரு செமஸ்டர் மாணவர்களுக்கும் 'பிரதமரின் இலவச லேப்டாப் திட்டம் 2023'ன் கீழ் மடிக்கணினிகள் வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. மடிக்கணினியின் சிறப்பம்சங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற போலியான செய்திகள் சமூக வலைதளங்களில் குறிப்பாக, வாட்ஸ் ஆப்பில் நிறைய வந்துகொண்டிருக்கின்றன. பொதுமக்கல் தான் அவற்றின் உண்மைத் தன்மையை அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். இதுபோன்ற போலியான செய்திகள் வந்தால் அதை PIB fact check மூலம் நீங்கள் சரிபார்க்கலாம்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்