ஆப்நகரம்

வருமான வரி: 20 லட்சம் பேருக்கு ரீஃபண்ட்!

கொரோனா காலத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வரி செலுத்துவோருக்கு ரூ.62,361 கோடி ரீஃபண்ட் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 3 Jul 2020, 5:22 pm
இந்தியாவில் கடந்த நான்கு மாதங்களுக்கும் மேலாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பொதுமக்கள் அனைவருக்கும் வருவாய் குறைந்து நிதி நெருக்கடி ஏற்பட்டது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க அரசு தரப்பிலிருந்து பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல் வரி, மற்றும் இதர சேவைக் கட்டணங்கள் செலுத்துவதற்கும், வங்கிக் கடன்களைத் திரும்பச் செலுத்துவதற்கும் கால அவகாசம் வழங்கப்பட்டது. பிஎஃப் தொகையை முன்கூட்டியே எடுப்பது, வருமான வரிக்கான ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்குவது போன்ற தீர்வுகளையும் மத்திய அரசு வழங்கி வருகிறது.
Samayam Tamil refund


கொரோனா பாதிப்பு நிலவும் இச்சமயத்தில் வரி செலுத்துவோருக்கு உதவும் நோக்கத்தில் நிலுவையில் உள்ள ரீஃபண்ட் தொகையைத் திரும்பி வழங்குவதற்கான பணியில், ஏப்ரல் 8 முதல் ஜூன் 30 வரை ஒரு நிமிடத்திற்கு 76 கோப்புகள் எனும் விகிதத்தில் ரீஃபண்ட் தொகையை வருமான வரித் துறை வழங்கியுள்ளது. மேற்கூறிய காலகட்டத்தில் மட்டும் மொத்தம் 20.44 லட்சத்துக்கும் அதிகமான கோப்புகளுக்கு ரூ.62,361 கோடிக்கும் அதிகமான ரீஃபண்ட் தொகையை மத்திய நேரடி வரிகள் வாரியம் வழங்கியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் தடையால் இத்தனை கோடி இழப்பா?

ஏப்ரல் 8 முதல் ஜூன் 30 வரையில், 19,07,853 வழக்குகளின் கீழ் ரூ.23,453.57 கோடி மதிப்பிலான வருமான வரி ரீஃபண்ட் தொகை வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் 1,36,744 வழக்குகளின் கீழ் ரூ.38,908.37 கோடி மதிப்பிலான கார்பரேட் வரி ரீஃபண்ட் தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்தொகை முழுவதும் மின்னணு வசதி மூலமாக வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளது.

வங்கிக்கு போகாமலேயே கடன் வாங்கலாம்: ஹெச்டிஎஃப்சி!

ரீஃபண்ட் தொகையை விரைந்து வழங்க வேண்டும் என்பதற்காக வருமான வரித் துறையிடமிருந்து தங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்களுக்கு வரி செலுத்துவோர் உடனடியாக பதிலளிக்க வேண்டுமென்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கேட்டுக்கொண்டது. தங்களது நிலுவைத்தொகை கோரிக்கை, வங்கிக் கணக்கு எண், ரீஃபண்ட் வழங்கப்படுவதற்கு முந்தைய குறைபாடு போன்ற தகவல்களை உறுதி செய்ய வரி செலுத்துவோரை வருமான வரித் துறை மின்னஞ்சல் வாயிலாகக் கேட்டுக்கொண்டது. இதைத் தொடர்ந்து வரி செலுத்துவோர் விரைவாகப் பதில் அனுப்பும் பட்சத்தில் அவர்களின் ரீஃபண்ட் தொகை விரைந்து வழங்கப்படும் என்று வருமான வரித் துறை கூறியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்