ஆப்நகரம்

வரி செலுத்துவோருக்கு நற்செய்தி! மத்திய அரசு அறிவிப்பு!

நாட்டிலுள்ள வரி செலுத்துவோர் அனைவரும் பயன்பெறும் வகையில், ரூ.5 லட்சம் வரையில் நிலுவையில் உள்ள வருமான வரி ரீபண்ட் தொகையை உடனடியாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Samayam Tamil 8 Apr 2020, 7:55 pm
நாடு முழுவதும் கொரோனா பீதி அதிகமாக இருப்பதாலும், நாட்டு மக்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து பண நெருக்கடி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாலும், வருமான வரி, ஜிஎஸ்டி, சுங்க வரி உள்ளிட்ட வரிகளுக்கான ரீபண்ட் தொகையை விரைந்து வழங்க மத்திய அரசு உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ரூ.5 லட்சம் வரையில் நிலுவையில் உள்ள அனைத்து வருமான வரி ரீபண்ட் தொகையையும் வருமான வரித் துறை உடனடியாக வழங்கும் என்று மத்திய நிதியமைச்சகம் இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Samayam Tamil வரி செலுத்துவோருக்கு நற்செய்தி மத்திய அரசு அறிவிப்பு


இதன் மூலமாக, வரி செலுத்தும் தனிநபர்களும் சிறு தொழில் துறையினரும் கொரோனா பாதிப்பு இருக்கும் இச்சூழலில் மிகவும் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பால் நாட்டிலுள்ள சுமார் 14 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள். மேலும், குறு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட சுமார் 1 லட்சம் தொழில் நிறுவனங்களுக்கு இது பயனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மதிப்பீடுகளின்படி, ரூ.18,000 கோடி ரீபண்ட் தொகைக்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி இழப்பீடு: கொரோனாவை எதிர்க்கக் கூடுதல் நிதி!

இதுமட்டுமல்லாமல், மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் மத்திய அரசு வழங்கியுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக, பிப்ரவரி 17ஆம் தேதி ரூ.19,950 கோடியை மத்திய அரசு வழங்கியிருந்த நிலையில், நேற்று மேலும் ரூ.14,103 கோடியை விடுவித்துள்ளது. இதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில அரசுகளின் நிதிநிலை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்