ஆப்நகரம்

ஐடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. ஃப்ரஷர்களுக்கு அடிக்கும் ஜாக்பாட்!

ஊழியர்களுக்கு அட்டகாசமான சம்பள உயர்வு வழங்க ஐடி நிறுவனங்கள் முடிவு.

Samayam Tamil 24 Apr 2022, 10:08 am
சம்பள உயர்வுக்காக காத்திருக்கும் ஐடி ஊழியர்களுக்கு ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. குறிப்பாக, ஃப்ரஷர்களாக சேர்ந்த ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு காத்திருப்பதாக ஐடி நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
Samayam Tamil it employees


ஐடி நிறுவனங்கள் தற்போது புதிதாக ஃப்ரஷர்களை வேலையில் சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளன. மேலும், நடுத்தர நிலை ஊழியர்களை விட ஃப்ரஷர்கள் எனப்படும் புதிய ஊழியர்களுக்கு அதிக சம்பள உயர்வு வழங்க ஐடி நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

இந்தாண்டிலேயே ஃப்ரஷர்களுக்கு சம்பளம் 3.65 லட்சம் ரூபாயில் இருண்டு 4.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என ஹெச்சிஎல் (HCL) நிறுவனத்தின் தலைமை ஹெச்.ஆர் அதிகாரி அப்பாராவ் தெரிவித்துள்ளார். மேலும், அனாலிடிக்ஸ், டிஜிட்டல் கண்டெண்ட் ஆகிய துறைகளில் பயிற்சி வழங்க பொறியியல் கல்லூரிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாகவும், இந்த பயிற்சியை முடிப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் எனவும் அப்பாராவ் தெரிவித்துள்ளார்.

வீட்டுக் கடன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்.. வட்டி அதிரடி குறைப்பு!
முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் தனது ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்த முடிவு செய்துள்ள நிலையில் மற்ற ஐடி நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக ஃப்ரஷர்களுக்கு அதிக சம்பளம் வழங்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இதன்படி, ஃப்ரஷர்களுக்கு குறைந்தபட்சம் 15% முதல் அதிகபட்சமாக 60% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இதுபற்றி டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ ஆகிய ஐடி நிறுவனங்கள் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடாமலேயே உள்ளன. விரைவில் சம்பள உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான புதிய ஊழியர்களை சேர்க்க ஐடி நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்