ஆப்நகரம்

கம்மி விலையில் ரயில் டிக்கெட்.. விரைவில் சலுகை கிடைக்குமா?

காத்திருக்கும் மூத்த குடிமக்கள்!

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 2 Mar 2023, 10:22 am
ரயில்களில் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த டிக்கெட் சலுகை விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samayam Tamil it is expected that the ticket concession given to senior citizens in trains will be restored
கம்மி விலையில் ரயில் டிக்கெட்.. விரைவில் சலுகை கிடைக்குமா?


மூத்த குடிமக்களுக்கு சலுகை!

ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் டிக்கெட் சலுகை குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்ட சலுகைகளை இந்திய ரயில்வே மீண்டும் கொண்டுவர உள்ளது. இதனுடன், தகுதி அளவுகோல்களிலும் சில மாற்றங்கள் வரும் என்று கூறப்படுகிறது.

வயது வரம்பு மாறுமா?

மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பை மாற்ற ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர, டிக்கெட்டுகளுக்கான தள்ளுபடி சில பிரிவுகளுக்கு மட்டுமே. இதற்கு முன்னர் அனைத்து வகை மக்களுக்கும் சலுகை கிடைத்த நிலையில், அதில் சில மாற்றங்களைக் கொண்டுவர இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

விரைவில் புதிய விதிமுறை!

மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதில் மூத்த குடிமக்களுக்கான மானியத்தை தக்க வைத்துக் கொண்டு இந்த சலுகைகளின் தொகையைக் குறைக்க அரசிடம் யோசனை உள்ளது. தற்போது வரை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

ரயில்வே அமைச்சர் பதில்!

மக்களவையில் ரயில்வே அமைச்சரிடம், ரயில்வே சலுகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ரயில் டிக்கெட்டுகளில் தள்ளுபடி கிடைக்கும் வசதியை ரயில்வே மீண்டும் வழங்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், 2019-20ஆம் ஆண்டில் பயணிகள் டிக்கெட்டுகளுக்கு ரயில்வே 59,837 கோடி ரூபாய் மானியமாக வழங்கியுள்ளது. இது தவிர, ஸ்லீப்பர் மற்றும் மூன்றாவது ஏசியில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு ரயில் டிக்கெட்டுகளில் சலுகை அளிக்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது என்று கூறினார்.

காத்திருக்கும் மூத்த குடிமக்கள்!

கொரோனா சமயத்தில் வருவாய் குறைவு மற்றும் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டியே மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகையை அரசு ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து ரயில்வே வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்