ஆப்நகரம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்? பிடிஆர் ஆவேசம்!

பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரி குறைப்புக்கு தமிழக நிதியமைச்சரின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Samayam Tamil 22 May 2022, 5:07 pm
சாமானிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோலியப் பொருட்களுக்கான கலால் வரியை மத்திய அரசு தற்போது குறைத்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 6 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil ptr


அதில், பெட்ரோல் - டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு நீண்ட காலமாகப் போராடி வரும் நிலையில், அதற்கு ஒரு வழியாக மத்திய அரசு செவிசாய்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2014 முதல் 2021 வரையில் பெட்ரோல் டீசல் வரியும் அதன் விலையும் உயர்ந்து வருவதைச் சுட்டிக் காட்டிய பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசே மவுனமாக இருந்த சமயத்தில் 2021ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஸ்டாலின் அரசு கலால் வரியை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கியதாகக் கூறியுள்ளார்.

இந்த வரிக் குறைப்பால் தமிழக அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ.1,160 கோடி செலவாகியுள்ளது. முன்னதாக 2006-11 ஆண்டுகளில் கூட திமுக அரசு பெட்ரோல் டீசல் வரியைக் குறைத்து பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்ததாக தமிழக நிதியமைச்சர் கூறியுள்ளார். ஆனால் மத்திய அரசோ கடந்த 7 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் மீது அதிக வரியை விதித்துள்ளதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

வேற லெவலில் குறைந்த பெட்ரோல் விலை.. வாகன ஓட்டிகள் ஹேப்பி அண்ணாச்சி!
இதுபோல, பலமுறை பெட்ரோல் டீசல் மீதான வரிகளை உயர்த்தும்போது மாநில அரசுகளிடம் மத்திய அரசு ஆலோசிப்பதில்லை எனவும், மாநில அரசுகள்தான் வரியைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது எனவும் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்