ஆப்நகரம்

TCS: சிறு நகரங்களில் டிசிஎஸ் அலுவலகம்.. ஐடி ஊழியர்களுக்கு குட் நியூஸ்!

டிசிஎஸ் நிறுவனம் சிறு நகரங்களிலும் அலுவலகங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளது.

Samayam Tamil 3 Jul 2022, 11:00 am
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் சென்னை, பெங்களூரு போன்ற மெட்ரோ நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. ஆனால் எல்லா ஊர்களையும் சேர்ந்த ஊழியர்கள் இந்நிறுவனங்களில் வேலை செய்து வருகின்றனர்.
Samayam Tamil TCS


இந்நிலையில், மெட்ரோ நகரங்களையும் தாண்டி இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஐடி நிறுவனங்கள் தங்களது அலுவலகங்களை அமைப்பதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஏற்கெனவே இன்ஃபோசிஸ் நிறுவனம் அறிவித்துவிட்ட நிலையில் தற்போது டிசிஎஸ் நிறுவனமும் இதே முடிவுக்கு வந்துள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் (Infosys) கோவை, கொல்கத்தா, நொய்டா ஆகிய நகரங்களில் புதிய ஐடி அலுவலகங்களை தொடங்க முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகியது.

Lottery: லாட்டரி வடிவில் வந்த சொந்த லாரி.. ஓட்டுநருக்கு அடித்த ஜாக்பாட்!
இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் (TCS) மெட்ரோ அல்லாத நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில் ஐடி அலுவலகங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக முதற்கட்டமாக கவுகாத்தி, கோவா, நாக்பூர் ஆகிய நகரங்களில் ஐடி அலுவலகங்களை டிசிஎஸ் அமைக்கவுள்ளது.

கொரோனா பாதிப்பு காலத்தில் ஏராளமான ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்தனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துவிட்டாலும் இன்னும் ஏராளமான ஊழியர்கள் சொந்த ஊர்களில் இருந்து வேலை செய்கின்றனர். இவர்களை அலுவலகங்களுக்கு வரவைப்பதற்காக இரண்டாம் நிலை நகரங்கள், சிறு நகரங்களிலும் டிசிஎஸ் அலுவலகங்களை அமைக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்