ஆப்நகரம்

38 ஆயிரம் பேருக்கு வேலை.. பிரபல ஐடி நிறுவனம் அறிவிப்பு!

இந்த ஆண்டில் சுமார் 38,000 பிரஷர்களுக்கு வேலை கொடுப்பதாக விப்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 30 Apr 2022, 3:44 pm
இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையில் கொரோனா பிரச்சினை வந்தபிறகு தேவை குறைந்து சரிவு ஏற்பட்டது. ஊழியர்கள் பலர் தங்களது வேலையையும் சம்பளத்தையும் இழந்தனர். எனினும் நிறையப் பேருக்கு வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வசதி கிடைத்தது. இந்நிலையில், தற்போது கொரோனா பிரச்சினைகள் குறைந்து இயல்புநிலை திரும்பியுள்ளதால் ஐடி துறையிலும் புதிய வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு போன்ற விஷயங்களில் நிறுவனங்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளன.
Samayam Tamil it job


அந்த வகையில் தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, 2022-23 நிதியாண்டில் மட்டும் 38,000 பிரஷர்களுக்கு வேலை கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. 2021-22 நிதியாண்டில் கூட 19,000 பேருக்கு மட்டுமே வேலை கொடுத்திருந்த நிலையில், இந்த ஆண்டில் இரு மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. விப்ரோ நிறுவனத்தில் தற்போது 2.43 லட்சம் பேருக்கு மேல் வேலை பார்க்கும் நிலையில், அடுத்த ஆண்டில் இன்னும் அதிகப் பேருக்கு வேலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த லிங்க்கை கிளிக் செய்து அட்டகாசமான பரிசு வெல்லுங்கள்


விப்ரோ நிறுவனத்தைப் போலவே, மற்ற முன்னணி ஐடி நிறுவனங்களும் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. டிசிஎஸ் நிறுவனம் 40,000 பேருக்கும், இன்ஃபோசிஸ் நிறுவனம் 50,000 பேருக்கும், ஹெச்.சி.எல். நிறுவனம் 45,000 பேருக்கும் வேலை கொடுக்கத் திட்டமிட்டுள்ளன. ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேறும் அட்ரிசன் விகிதம் அதிகரித்துள்ள நிலையில், புதிதாக ஆட்களைச் சேர்ப்பதில் நிறுவனங்கள் மும்முரமாக உள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்