ஆப்நகரம்

ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பு; சிடிஎஸ் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கம்!

வரி ஏய்ப்பு புகாரில், சிடிஎஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 28 Mar 2018, 1:01 am
சென்னை: வரி ஏய்ப்பு புகாரில், சிடிஎஸ் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil CTS Chennai
சிடிஎஸ் நிறுவனம்


அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு சிடிஎஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் கிளை விரித்து, தொழில் செய்து வருகிறது.

இந்நிலையில் 2016-17 நிதியாண்டில் வருமானத்தை குறைவாகக் காட்டி, ரூ.2,500 கோடி வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சிடிஸ் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள சிடிஎஸ் நிறுவனம், வருமான வரித்துறை நடவடிக்கை எங்கள் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த தொழில் நிறுவனங்களை பாதிக்காது.

சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, வழக்கு விசாரணை முடியும் வரை நடவடிக்கை எடுக்க தடை விதித்தது.

எல்லா வரியையும் முறையாக கட்டியுள்ளோம். வருமான வரித்துறை சட்டத்தை மீறிச் செயல்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

IT officials have frozen accounts and deposits of Cognizant.

அடுத்த செய்தி

டிரெண்டிங்