ஆப்நகரம்

வருமான வரி தாக்கல்: கேரளாவுக்கு செப். 15 வரை அவகாசம்

கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் அம்மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 7:36 pm
கேரளா வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் அம்மாநிலத்திற்கு மட்டும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Kerala-ksNF--621x414@LiveMint


இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கேரள மாநிலம் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் அம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவசாகம் செப்டம்பர் 15, 2018 வரை நீட்டிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஆகஸ்ட் 31, 2018 அன்று முடிகிறது.

முன்னதாக கடந்த மாதம் வருமான வரி தாக்கலுக்கான அவகாசத்தை ஜூலை 31, 2018 என்பதிலிருந்து ஆகஸ்ட் 31, 2018 வரை என்று மாற்றி அறிவித்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்