ஆப்நகரம்

வங்கிகளை தனியார் மயமாக்க சரியான நேரம்: பொருளாதார ஆலோசகர்

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு சரியான நேரம் இது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Samayam Tamil 17 Feb 2018, 1:13 pm
சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு சரியான நேரம் இது என்று தலைமைப் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Samayam Tamil its time to privatise public sector banks chief economic adviser arvind subramanian
வங்கிகளை தனியார் மயமாக்க சரியான நேரம்: பொருளாதார ஆலோசகர்


சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற கருத்தருங்கு ஒன்றில் பேசிய அவர், “பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க வேண்டிய சரியான நேரத்தில இருக்கிறோம். அவ்வாறு செய்யும் போது வங்கிகளை கண்காணிக்க வலுவான ஒழுங்குமுறை விதிகளை உருவாக்க வேண்டும். வங்கிகள் தனியார்மயமாவதால் வேளாண்துறைக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படாது.” என்று குறிப்பிட்டார்.

“1990ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்காக கடன் அளித்தவை பொதுத்துறை வங்கிகள் மட்டுமே. அந்தக் கடனை தனியார் வங்கிகள் மூலம் கொடுத்திருந்தால், தற்போதைய நிலை வந்திருக்காது. சில வங்கிகளின் தலைமை செயலிழந்துவிட்ட நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் அமைப்புகளும் ஒழுங்காக செயல்படவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

“பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது பற்றி முடிவுசெய்ய வேண்டியது ஜிஎஸ்டி கவுன்சில்தான்” என்றும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்