ஆப்நகரம்

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு - மாநில அரசு ஜாக்பாட் அறிவிப்பு!

மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்படுவதாக குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 17 Aug 2022, 9:08 am
ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு முழுவதும் 76ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நாளில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசும் மாநில அரசுகளும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி அறிவித்தார்.
Samayam Tamil DA hike


இந்நிலையில், குஜராத் மாநிலத்திலும் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல், 3 சதவீத அகவிலைப்படி உயர்வை நேற்று அறிவித்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆரவள்ளி மாவட்டத்தில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர், இந்த அறிவிப்பை வெளியிட்டு அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைப்படி வெளியிடப்பட்டுள்ள இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜனவரி 1 முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுமார் 9.38 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு அறிவிப்பால் மாநில அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தாலும் இதனால் அரசுக்கு நிதிச் சுமை அதிகரிக்கும். மாநில அரசின் கருவூலத்தில் அகவிலைப்படி உயர்வால் ஆண்டுக்கு ரூ.1,400 கோடி கூடுதலாகச் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
அகவிலைப்படி உயர்வு மட்டுமல்லாமல் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் நீட்டிக்கப்படுவதாகவும் குஜராத் முதல்வர் அறிவித்தார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு இதுபோல இன்னும் சில சிறப்பு அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

குஜராத் மாநில அரசைத் தொடர்ந்து மற்ற மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்