ஆப்நகரம்

old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு ஊழியர்களின் அடுத்த மூவ்!

ஆகஸ்ட் 5ஆம் தேதி வெடிக்கும் மாபெரும் போராட்டம்!

Samayam Tamil 18 Jul 2022, 11:34 am
தமிழகத்தில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
Samayam Tamil jacto geo members protest on august 5th for old pension scheme and dearness allowance
old pension scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழக அரசு ஊழியர்களின் அடுத்த மூவ்!


பழைய பென்சன் திட்டம்!

தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகளில் மிக முக்கியமான ஒன்று பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது. தற்போது நடைமுறையில் உள்ள CPS எனப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவும் இதில் இழப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் இத்திட்டத்தை அமல்படுத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன.

அடம் பிடிக்கும் முதல்வர்!

பழைய பென்சன் திட்டத்தை ஒரு சில மாநிலங்கள் அமல்படுத்திவிட்டன. சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தில் பழைய பென்சன் திட்டம் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்கும் தமிழகத்தில் ஏன் இத்திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்று அரசு ஊழியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு?

திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் பழைய பென்சன் திட்டத்தைக் கொண்டுவருவதாகக் கூறிவிட்டு, இப்போது பேச்சை மாற்றுவதாக அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, CPS திட்டத்தை ஒழிப்பதற்காக ஒன்றாகக் கூடியுள்ள CPS ஒழிப்பு அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை கட்டாயம் செயல்படுத்துவதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது ஏமாற்றுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடிதம் - போராட்டம்!

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசு ஊழியர்கள் சார்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுபோல, பல்வேறு துறை சார்ந்த ஊழியர்கள் சார்பாக CPS ஒழிப்பு அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர். மாவட்ட தலைமை இடங்களில் போராட்டமும் செய்து வருகின்றனர்.

ஜாக்டோ - ஜியோ!

தமிழக ஆசிரியர்கள் கூட்டமைப்பு மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ஒன்றாக இணைந்த கவுன்சில் (ஜாக்டோ - ஜியோ) மாபெரும் போராட்டத்தை அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆகஸ்ட் 5ஆம் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை!

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில மையத்தில் ஜூலை 17ஆம் தேதி நடைபெற்றது. இதில் கீழ்க்காணும் மூன்று தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

முதல்வர் உடல்நிலை!

முதல் தீர்மானமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்றிட வேண்டும் என்று வேண்டினர். சில நாட்களுக்கு முன்னர்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இப்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.

அகவிலைப்படி உயர்வு!

இரண்டாவது தீர்மானமாக மத்திய அரசு 2022 ஜனவரி 1 முதல் வழங்கிய 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக முன் தேதியிட்டு வழங்கிடவும் கால வரயரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கடைசி தீர்மானமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டங்கள் நடத்துவது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்