ஆப்நகரம்

வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தால் ரூ.5,000!

ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்குகளில் ஆதாரை இணைத்தால் ரூ.5000 வரையில் பணம் எடுக்கும் வசதி எப்படி என்று பார்க்கலாம்.

Samayam Tamil 14 Oct 2020, 4:43 pm
நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களையும் வங்கிச் சேவைக்குள் கொண்டுவரும் நோக்கத்தில் 2014ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வங்கியில் கணக்கு இல்லாத சுமார் 7 கோடி குடும்பத்தினருக்கு வங்கிக் கணக்கு தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஒரு லட்சம் ரூபாய்க்கான காப்பீடு, ஓய்வூதியம் உள்ளிட்ட வசதிகளோடு, மத்திய - மாநில அரசுகளின் நிதியுதவிகள் இந்த ஜன் தன் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகளும் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil jan dhan


இந்த ஜன் தன் கணக்கின் சிறப்பம்சம் என்னவென்றால் உங்களது வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்றால் கூட நீங்கள் ரூ.5,000 வரையில் ஓவர் டிராஃப்ட் முறையில் பணம் எடுக்க முடியும். ஆனால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. உங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியை உங்களால் பெற முடியும். பொதுவாக ஓவர் டிராஃப்ட் வசதியைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் முதல் ஆறு மாதங்களுக்கு குறைந்தபட்ச இருப்புத் தொகையை மெயிண்டைன் செய்ய வேண்டும் என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இந்த வங்கிக் கணக்குக்கு டெபிட் கார்டு வாங்கியிருக்க வேண்டும். அடிக்கடி பணப் பரிவர்த்தனையும் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

பிஎஃப் பணம்: இனி வாட்ஸ் ஆப்பிலேயே எல்லாம் கிடைக்கும்!

10 வயது குழந்தைக்குக் கூட இத்திட்டத்தின் கீழ் எளிதாக வங்கிக் கணக்கு திறக்க முடியும். ஜன் தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு திறப்பதற்கு ஆதார், பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ், பேன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 100 நாள் வேலைத் திட்ட அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும். உங்களுக்கு அருகில் உள்ள வங்கிக் கிளைக்குச் சென்று நீங்கள் மிகச் சுலபமாக இத்திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கு பயன்பெற முடியும். அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாகவே இந்த வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுவதால் இடைத்தரகர்களின் சுரண்டல் போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்