ஆப்நகரம்

வங்கிக் கணக்கு வைத்திருந்தால் 10,000 ரூபாய் கிடைக்கும்!

ஜன் தன் யோஜனா வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி 10,000 ரூபாய் எடுக்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 16 Apr 2023, 2:28 pm
ஏழை மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து நிதியுதவி வழங்குவது முதல் இலவச ரேஷன் வழங்குவது வரை பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் மிக முக்கியமான ஒரு திட்டம்தான் ஜன் தன் யோஜனா. ஜன் தன் கணக்கு மூலமாக மக்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
Samayam Tamil jan dhan


ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு தற்போது ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து ரூ.10,000 வழங்கப்படுகிறது. நாட்டின் 47 கோடிக்கும் அதிகமான ஜன் தன் கணக்குதாரர்களுக்கு இதன் பலன் கிடைக்கும். ஆனால் நீங்கள் இந்தப் பணத்தைப் பெற விண்ணப்பிக்க வேண்டும். அனைவருக்குமே இந்தப் பணம் கிடைத்துவிடாது.

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை நாடு முழுவதும் 47 கோடிக்கும் அதிகமான கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜன் தன் கணக்கில் காப்பீடு செய்யும் வசதியை அரசு வழங்கியுள்ளது.

10,000 ரூபாய் பெறுவது எப்படி?

நீங்களும் ஜன்தன் கணக்கு வைத்திருந்தால் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெறலாம். இந்த வசதியின் கீழ், உங்கள் கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாவிட்டாலும் 10,000 ரூபாய் எடுக்கலாம். முன்னதாக ஓவர் டிராஃப்ட் வசதியில் 5000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. ஆனால் இந்தத் தொகை தற்போது 10,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள் என்ன?

>> அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறுகின்றனர்.

>> உங்கள் மாத வருமானம் 15000 ரூபாய்க்கு குறைவாக இருந்தால் மட்டுமே இதில் பயன்பெற முடியும்.

>> தனியார் அல்லது பொதுத்துறை வங்கியில் எங்கு வேண்டுமானாலும் இதில் கணக்கு தொடங்கலாம்.

>> உங்களிடம் ஏற்கனவே சேமிப்புக் கணக்கு இருந்தால், அந்தக் கணக்கையும் ஜன் தன் கணக்காக மாற்றலாம்.

>> இந்தக் கணக்கைத் திறக்க உங்களுக்கு 10 வயது அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

ஜன் தன் யோஜனா திட்டத்தில் இதுபோன்ற நிறைய அம்சங்கள் உள்ளன. நாட்டு மக்கள் அனைவருமே வங்கிக் கணக்கு திறக்க வேண்டும் எனவும், அரசின் உதவிகளைப் பெற வேண்டும் என்பதற்காகவும் தான் இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்