ஆப்நகரம்

இந்தியாவுக்கு ரூ.2288 கோடி கடன்.. பச்சைக் கொடி காட்டிய ஜப்பான்!

இந்தியாவுக்கு 2288 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஜப்பான் ஒப்புதல்.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 28 Feb 2023, 12:56 pm
இந்தியாவில் இரண்டு திட்டங்களுக்காக 2288 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.
Samayam Tamil Elon musk
Elon musk


மும்பையில் ட்ரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டத்துக்கும் (Mumbai Trans-Harbour Link), மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கும் 2,288 கோடி ரூபாய் கடன் வழங்குவதற்கு ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, மும்பை ட்ரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டத்துக்கு 30.755 பில்லியன் ஜப்பானிய யென் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 30.755 பில்லியன் யென் என்பது 1,728 கோடி ரூபாய்.

இதுபோக, மிசோரம் மாநிலத்தில் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அமைப்பதற்கு 9.918 பில்லியன் யென் கடன் வழங்கவும் ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 9.918 பில்லியன் யென் என்பது 560 கோடி ரூபாய்.

ஆக மொத்தம் இந்த இரண்டு திட்டங்களுக்கும் 2,288 கோடி ரூபாய் கடன் வழங்குகிறது ஜப்பான். மும்பை ட்ரான்ஸ் ஹார்பர் இணைப்பு திட்டம் என்பது மும்பை பெருநகர் பகுதியை நவி மும்பை பகுதியுடன் இணைப்பதற்கான சாலை திட்டம் ஆகும். போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், போக்குவரத்தை வேகப்படுத்தவும் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் அமைக்கப்படும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் அம்மாநிலத்தில் புற்றுநோய் தடுப்பை மேம்படுத்தவும், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை வசதிகளை அதிகரிக்கவும் கொண்டுவரப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு திட்டங்களுக்காகவும் 2,288 கோடி ரூபாய் கடன் வழங்க ஜப்பான் பச்சைக் கொடி காட்டியுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்