ஆப்நகரம்

JoyAlukkas IPO: பின் வாங்கிய ஜாய் ஆலுக்காஸ்.. ஐபிஓ பங்கு விற்பனை ரத்து!

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் 2300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ பங்கு விற்பனையை ரத்து செய்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 21 Feb 2023, 5:37 pm
பிரபல நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் (Joy Alukkas) ஐபிஓ (IPO) வாயிலாக பங்குகளை முதல்முறையாக விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், ஐபிஓ பங்கு விற்பனையை ரத்து செய்ய ஜாய் ஆலுக்காஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil Joy Alukkas IPO
Joy Alukkas IPO


இந்திய மக்கள் தங்கம் மற்றும் நகைகளை அந்தஸ்துக்கான ஒரு பொருளாகவும், சேமிப்பாகவும், பணத்தை பெருக்கும் சொத்தாகவும் பார்க்கின்றனர். தற்போது இந்தியாவில் நகைகள் துறையில் டைட்டன், கல்யாண் ஜுவல்லர்ஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளன.

இந்நிலையில், மற்றொரு மிகப்பெரிய நகைகள் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் கடந்த சில ஆண்டுகளாகவே தனது பங்குகளை ஐபிஓ வாயிலாக விற்பனை செய்வதற்கு திட்டமிட்டு வந்தது. ஏற்கெனவே ஐபிஓ வாயிலாக பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்ட ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் பின்னர் 2018ஆம் ஆண்டில் தள்ளிப்போட்டுவிட்டது.

கேரள மாநிலம் திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் சுமார் 68 நகரங்களில் ஸ்டோர்களை அமைத்து இயங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல் ஆன்லைனிலும் நகைகளை விற்பனை செய்து வருகிறது. நாட்டின் மிகப்பெரிய நகை நிறுவனங்களில் ஜாய் ஆலுக்காஸும் ஒன்று.

ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் புரமோட்டர் ஆலுக்காஸ் வர்கீஸ் ஜாய். புதிய ஸ்டோர்களை திறப்பதற்காகவும், சில கடன்களை அடைப்பதற்காகவும் ஐபிஓ வாயிலாக பங்குகளை விற்பனை செய்ய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐபிஓ வாயிலாக பங்குகளை விற்பனை செய்ய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் முடிவு செய்திருந்தது. இதற்காக 2022ஆம் ஆண்டு மார்ச் மாதமே ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் செபியிடம் DRHP ஆவணத்தை தாக்கல் செய்தது.

சுமார் 2300 கோடி ரூபாய்க்கு ஐபிஓவில் பங்குகளை விற்பனை செய்ய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், 2300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐபிஓ பங்கு விற்பனையை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் வாபஸ் பெற்றுவிட்டதாக Reuters ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்