ஆப்நகரம்

தூள் கிளப்பும் ஜியோ... மண்ணைக் கவ்விய வோடஃபோன் ஐடியா!

சென்ற ஆகஸ்ட் மாதத்தில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோரை தனது நெட்வொர்க்கில் இணைத்துள்ளது ஜியோ நிறுவனம்.

Samayam Tamil 20 Oct 2021, 2:24 pm
இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தாதார்களின் எண்ணிக்கை குறித்த அறிக்கையை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தாதார்களின் எண்ணிக்கை 1,209.58 மில்லியனாக உயர்ந்துள்ளது. முன்னதாக ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,209.45 மில்லியனாக இருந்தது. இது 0.01 சதவீத வளர்ச்சியாகும். நகரப்புறங்களில் 671.31 மில்லியன் பேரும், கிராமப்புறங்களில் 538.28 மில்லியன் பேரும் தொலைத் தொடர்பு சந்தாதார்களாக உள்ளனர்.
Samayam Tamil telecom


இந்தியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவின் தொலைத் தொடர்பு அடர்த்தி 88.45 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதற்கு முன்னர் ஜூலை மாதத்தில் இது 88.51 சதவீதமாக இருந்தது. நெட்வொர்க் நிறுவனங்களைப் பொறுத்தவரையில், வழக்கம்போல முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதன் சந்தைப் பங்கு தற்போது 37.40 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதைத் தொடர்ந்து 29.85 சதவீத சந்தைப் பங்குடன் ஏர்டெல் நெட்வொர்க் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தில் உள்ள வோடஃபோன் ஐடியா நெட்வொர்க்கின் சந்தைப் பங்கு 22.84 சதவீதம் மட்டுமே.

பைக் வாங்க சூப்பர் சான்ஸ்... 27000 ரூபாய்க்கு ஆக்சஸ் பைக்!
நெட்வொர்க் சேவையில் புதிதாக இணைக்கப்பட்ட சந்தாதார்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், ஆகஸ்ட் மாதத்தில் ஜியோ நெட்வொர்க் புதிதாக 6,49,754 பேரைத் தனது சேவைக்குள் இணைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் புதிதாக 1,38,132 பேரைச் சேர்த்துள்ளது. ஆனால், வோடாஃபோன் ஐடியா நெட்வொர்க்கிலிருந்து மொத்தம் 8,33,549 பேர் வெளியேறியுள்ளனர். ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த சந்தாதார்களின் எண்ணிக்கை தற்போது 44.38 கோடியாக உள்ளது. அதேநேரம் ஏர்டெல் நெட்வொர்க் சந்தாதார்களின் எண்ணிக்கை 35.41 கோடியாகவும், வோடஃபோன் ஐடியா நெட்வொர்க் சந்தாதார்களின் எண்ணிக்கை 27.10 கோடியாகவும் உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்