ஆப்நகரம்

இதை செய்தால் ஈசியா ரூ.50 லட்சம் கிடைக்கும்!

மத்திய அரசின் சவாலில் பங்கேற்று ரூ.50 லட்சம் வெல்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Samayam Tamil 20 Sep 2020, 5:54 pm

மத்திய ஐடி அமைச்சகத்துடன் இணைந்து தேசிய நீர் திட்டம் ஐசிடி கிராண்ட் சேலஞ் (ICT Grand Challenge) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமே ஸ்மார்ட்டான நீர் விநியோக அளவீடு மற்றும் கண்காணிப்பு அமைப்பை உருவாக்குவதுதான்.
Samayam Tamil Indian rupees


இப்படி உருவாக்கப்படும் அமைப்புகள் கிராமங்கள்தோறும் பொருத்தப்படும். இந்த அமைப்பை உருவாக்குவதற்கான சவாலில் பங்கேற்க இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களிடம் இருந்து முன்மொழிதல்கள் கோரப்பட்டுள்ளது.

இதன்படி, சிறந்த நீர் மேலாண்மை அமைப்பை உருவாக்கி சவாலில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும். இரண்டாம் பரிசு வாங்குவோருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும். வெற்றிகரமான டெவலப்பர்களுக்கு ஐடி அமைச்சகத்தின் ஆதரவுடன் எதிர்கால பணிகளை மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
தொழில் தொடங்கப் போறீங்களா? ரூ.10 லட்சம் வரையில் அரசாங்கக் கடன்

தேசிய நீர் திட்டத்தின் கீழ் 2024ஆம் ஆண்டுக்குள் அனைத்து கிராமப்புற குடும்பங்களுக்கும் தூய்மையான குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கண்காணிக்க ஆட்டோமேட்டிக் தகவல் சேகரிப்பு முறை பயன்படுத்தப்பட இருக்கிறது.

நீர் விநியோக முறையை டிஜிட்டல்மயமாக்குவதனால் பல பிரச்சினைகள் தீரும் என்பதி அரசின் எண்ணம். எனவே ஐசிடி கிராண்ட் சேலஞ் மூலம் நேர்த்தியான நீர் விநியோக அமைப்பை கிராமங்களுக்காக உருவாக்க அரசு முயற்சித்து வருகிறது. முதல்கட்டமாக 100 கிராமங்களில் இது அமல்படுத்தப்படும். பின்னர் முடிவுகளுக்கு ஏற்ப மற்ற கிராமங்களிலும் கொண்டுவரப்படும்.

இந்த சவால் தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்