ஆப்நகரம்

ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடருக்கு தடை.. வெளியான அதிர்ச்சி தகவல்!

மிகவும் பிரபலமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு 15 ஆயிரம் கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 13 Aug 2022, 9:35 am
ஒரு காலத்தில் பேபி பவுடர் என்றாலே ஜான்சன் & ஜான்சன் என்ற நிலைமை இருந்தது. இப்போதும் நிறைய பெற்றோர்கள் இந்த பவுடரைத்தான் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் கேன்சரை உண்டாக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil johnson and johnson


இதையடுத்து ஜான்சன் & ஜான்சன் பவுடர் நிறுத்தப்பட உள்ளது. 2023ஆம் ஆண்டில் ஜான்சன் & ஜான்சன் அதன் டால்க் பேஸ்டு பேபி பவுடரின் விற்பனையை நிறுத்துகிறது. உண்மையில், அமெரிக்காவில் நடந்து வரும் நுகர்வோர் பாதுகாப்பு வழக்கு காரணமாக, ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இந்தப் பெரிய முடிவை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக 2020ஆம் ஆண்டில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அமெரிக்கா மற்றும் கனடாவில் அதன் பவுடர் விற்பனையை நிறுத்தியது. இந்த பவுடரில் ஒரு வகையான தீங்கு விளைவிக்கும் கல்நார் நார்ச்சத்து கண்டறியப்பட்டது. இது புற்றுநோயை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. கருப்பையில் புற்றுநோயை ஏற்படுத்துவதாக சுமார் 35,000 பெண்கள் அந்த நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தனர்.

விவசாயிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் தமிழக அரசு!
இந்த சர்ச்சைக்குப் பிறகு, அமெரிக்காவில் அதன் தேவை கணிசமாகக் குறைந்தது. இதையடுத்து இந்நிறுவனம் 2020ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவில் பேபி பவுடர் விற்பனையை நிறுத்தியது. ஆனாலும் பிரிட்டன் உட்பட உலகின் பிற நாடுகளில் இன்னும் விற்பனை செய்து வருகிறது.

பவுடர் மீதான இந்த குற்றச்சாட்டில் அந்நிறுவனத்திற்கு 15,000 கோடி ரூபாய் அபராதம் விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளின் உடல் நலத்துடன் அந்த நிறுவனம் விளையாடியுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்