ஆப்நகரம்

ஸ்மார்ட்போன் விற்பனை உயர்வு... சாம்சங் ஆதிக்கம்!

ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

Samayam Tamil 5 Nov 2020, 6:21 pm
கொரோனா ஊரடங்கால் ஏப்ரல் - ஜூன் மாதங்களில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை மிக மந்தமாக இருந்தது. எனினும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஸ்மார்ட்போன் விற்பனை மீண்டும் சூடுபிடித்தது. சி.எம்.ஆர். நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இக்காலாண்டில் சீனாவின் க்ஷியோமி நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. க்ஷியோமி நிறுவனம்தான் கடந்த சில ஆண்டுகளாகவே சந்தையில் முதலிடத்தில் இருந்து வந்தது.
Samayam Tamil smartphones


இக்காலாண்டில் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில் சாம்சங் நிறுவனத்தின் M01, A21S, M30s ஆகிய மாடல்கள் ஒட்டுமொத்த விற்பனையில் 60 சதவீதப் பங்களிப்பைக் கொண்டுள்ளன. க்ஷியோமி நிறுவனத்தைப் பொறுத்தவரையில், விற்பனையில் 5 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்து இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனை உயர்ந்ததற்கு பண்டிகை கால சிறப்பு விற்பனை காரணமாக அமைந்தது. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் மின்னணு வர்த்தக நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அறிவித்ததால் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது.

வங்கிக் கணக்கில் பணம் வந்திருச்சா? மோடி அரசின் தீபாவளிப் பரிசு!

ஆப்பிள் போன் விற்பனையில் 67 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்தியாவில் தனது அதிகபட்ச காலாண்டு விற்பனையை ஜூலை - செப்டம்பர் காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் பட்டியலில் ஆப்பிள் ஏழாம் இடம் பிடித்துள்ளது. ஐபோன் எஸ்.ஈ. மற்றும் ஐபோன் 11 பிராண்டுகள் அதிகமாக விற்பனையானதால் இந்த வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஸ்மார்போன் விற்பனையில் 2 மடங்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், சாதாரண வகை பீச்சர் போன்கள் சந்தையில் 2 சதவீத வளர்ச்சி மட்டுமே ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி