ஆப்நகரம்

ஜன் தன் வங்கிக் கணக்கு: ஆர்பிஐ வைக்கும் ஆப்பு

ஜன் தன் வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் கணக்கை அந்த மாத இறுதி வரை முடக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

Samayam Tamil 28 May 2018, 5:41 pm
ஜன் தன் வங்கிக் கணக்குகளில் 4 முறைக்கு மேல் பணம் எடுப்பவர்களின் கணக்கை அந்த மாத இறுதி வரை முடக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Samayam Tamil jan-dhan-s_650_091316125118


அனைவருக்கும் வங்கிக் கணக்கு ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஜன் தன் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அரசு அளிக்கும் மானியத்தைத் தொகை இந்த கணக்குகள் மூலம் நேரடியாக மக்களுக்கு வழங்குகிறது.

இந்நிலையில், ஜன் தன் திட்டத்தில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் தீடீர் மாற்றத்தை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது பற்றிய எஸ்.எம்.எஸ். மூலம் வங்கிக் கணக்குதாரர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளது. இதன்படி, ஜன் தன் கணக்குகளில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் எந்த வழியில் பணம் எடுத்தாலும் அந்த கணக்கு மாத இறுதி வரை முடக்கப்படும். அடுத்த மாதம் பிறந்த பிறகே அந்தக் கணக்கை மீண்டும் பயன்படுத்த முடியும்.

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருந்தால் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க அவசியமில்லை. ஆனால், ஜன் தன் கணக்கை சாதாரண வங்கி கணக்காக மாற்றினால், குறைந்தபட்ச தொகையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்.

இதனிடையே, ஹெச்.டி.எஃப்.சி. மற்றும் சிட்டி போன்ற தனியார் வங்கிகள் ஜன் தன் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் ஒரு மாதத்தில் 4 முறைக்கு மேல் பணம் எடுத்துவிட்டால், அந்தக் கணக்கை சாதாரண கணக்காக மாற்றி விடுகின்றன. இதனால், குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாத பட்சத்தில் அதற்காக அபாரதத்தையும் செலுத்த வேண்டும். ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்றவை 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் அந்தக் கணக்கை மாத இறுதி வரை முடக்கிவிடுகின்றன.

ரிசர்வ் வங்கியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் கோடிக்கணக்கான ஜன் தன் வங்கிக் கணக்குதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்