ஆப்நகரம்

ஏடிஎம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை... இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

பணம் எடுக்கும்போது இதெல்லாம் நடக்கலாம்!

Samayam Tamil 25 Jan 2021, 3:41 pm
ஏடிஎம் மோசடிகளில் சிக்காமல் இருக்க வாடிக்கையாளர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் இந்த விஷயங்கள் எல்லாம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
Samayam Tamil keep these things in mind while using atm alert for customers
ஏடிஎம் பயன்படுத்தும்போது ஜாக்கிரதை... இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!


தொடரும் மோசடிகள்!

இந்தியாவில் வங்கி மோசடிகளும் ஏடிஎம் கொள்ளைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஏடிஎம் அல்லது PIN நம்பரை முறைகேடாகப் பயன்படுத்தி பணம் திருடும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. வங்கி தரப்பிலிருந்து பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் வாடிக்கையாளர்கள் விழிப்புடன் இருந்தால்தான் இதுபோன்ற மோசடிகளைக் கட்டுப்படுத்த முடியும். வங்கியிலிருந்து அழைப்பதாகக் கூறி, ஏடிஎம் நம்பர், வங்கிக் கணக்கு எண், பான் எண், ஆதார் எண் போன்ற விவரங்களைக் கேட்டறிந்து பணம் மோசடி செய்வோர் குறித்த புகார்களும் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.

வாடிக்கையாளர்கள் கவனத்துக்கு!

>> ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுக்கும்போது முதலில் வரவேற்பு செய்தி திரையில் வந்துள்ளதா என சரிபார்க்கவும்.

>> நீங்கள் ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்தவுடன் வங்கி உடனடியாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு செய்தியை அனுப்புகிறது. எனவே பணத்தை எடுத்தவுடன் உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்திருக்கிறதா என்று சோதிக்கவும்.

>> ஏடிஎம் பயன்படுத்தும் போது தெரியாத நபர்களிடம் கவனமாக இருங்கள். அவர்களுடன் பேச வேண்டாம். உங்களது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.

>> ஏடிஎம் பயன்படுத்தும் போது நீங்கள் ஏதேனும் சிக்கலை எதிர்கொண்டால், அங்கு இருக்கும் பாதுகாப்புக் காவலரின் உதவியைக் கேளுங்கள்.

>> ஏடிஎம் பின் நம்பரை உள்ளிட்டு அனைத்து தகவல்களையும் ஏடிஎம்மில் கொடுத்த பிறகு, பணம் வெளியே வரவில்லையென்றால் அல்லது செய்தி திரையில் தோன்றவில்லை என்றால், அங்குள்ள காவலருக்குத் தெரிவிக்கவும். அல்லது நீங்கள் அந்த வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.

எஸ்பிஐ எச்சரிக்கை!

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) தனது வாடிக்கையாளர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு வழங்கியுள்ளது.

>> ஏடிஎம் பரிவர்த்தனைகள் ரகசியமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

>> ஏடிஎம் மெஷின் அல்லது பிஓஎஸ் மெஷினில் ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தும் போது கீபோர்டை உங்களது கையால் மறைக்கவும்.

>> உங்களது ஏடிஎம் PIN அல்லது கார்டு விவரங்களை ஒருபோதும் யாரிடமும் பகிர வேண்டாம்.

>> உங்களது ஏடிஎம் கார்டில் PIN நம்பரை எழுதி வைக்காதீர்கள்.

>> கார்டு மற்றும் PIN விவரங்களைக் கேட்டு எஸ் எம் எஸ், ஈமெயில், அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்க வேண்டாம்.

>> தற்போதைய மொபைல் எண் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களது அனைத்து பரிவர்த்தனைகளையும் உங்களால் கண்காணிக்க முடியும்.

>> உங்களது ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் உடனடியாக வங்கிக்குத் தெரிவிக்கவும். முறைகேடான பரிவர்த்தனைகள் நடந்திருந்தால் புகாரளிக்கவும்.

>> பரிவர்த்தனை எச்சரிக்கை எஸ்எம்எஸ் மற்றும் வங்கி அறிக்கையை தவறாமல் சரிபார்க்கவும்.

>> பரிவர்த்தனை செய்யும் போது மொபைல் போனில் பேசுவதைத் தவிர்க்கவும்.

>> உங்களது கார்டை யாரிடமும் கொடுத்து பணம் எடுக்கச் சொல்லாதீர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்