ஆப்நகரம்

பனை தொழிலாளர்களுக்கு நற்செய்தி... மத்திய அரசின் புதிய திட்டம்!

பனை தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சியால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்று காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Jun 2020, 4:06 pm
நாடு முழுவதும் 10 கோடிக்கும் மேற்பட்ட பனைமரங்கள் உள்ளன. பனைமரங்களில் இருந்து சூரிய உதயத்துக்கு முன்பாக எடுக்கப்படும் பதநீர் சுவையான பானமாக இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் பதநீர் பரவலாக அருந்தப்படுகிறது. ஆனால், இதை முறையாக சந்தைப்படுத்தாததால் வர்த்தக ரீதியாகப் பதநீரை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியவில்லை. பதநீரை முறையாக சந்தைப்படுத்தினால் இவற்றிலிருந்து மிட்டாய்கள், மில்க் சாக்லேட்டுகள், ஐஸ்கிரீம் மற்றும் பாரம்பரிய இனிப்பு வகைகள் தயாரிக்க முடியும் என்று சிறு குறு மற்று நடுத்தர தொழில் துறை அமைச்சகம் கூறுகிறது.
Samayam Tamil palm


மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகத்தின் நடவடிக்கையால் பதநீரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்யும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. பதநீரை வர்த்தக ரீதியான குளிர்பானமாக மாற்றப் பெரிய நிறுவனங்களை ஈடுபடுத்தும் சாத்தியக் கூறுகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது. தற்போது இந்தியாவில் ரூ.500 கோடி அளவுக்கு பதநீர் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வர்த்தக ரீதியாகத் தயாரிக்கும் போது இந்த வருவாய் பல மடங்காக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

35,000 பேருக்கு வேலை காலி... இப்போது யார் தெரியுமா?

பதநீர் மற்றும் பனை வெல்லம் தயாரிப்பதற்கான விரிவான திட்டத்தை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் தயாரித்துள்ளது. பதநீர் நொதித்து போவதைத் தடுக்க, இவற்றை பதப்படுத்தி பாதுகாப்பதற்கான திட்டத்தைத் தொடங்கவும் இந்த ஆணையம் திட்டமிட்டுள்ளது. குளிர்பானங்களுக்கு மாற்றாக பதநீரை ஊக்குவிக்கவும் பழங்குடியின மக்களுக்கு சுய வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதும்தான் இத்திட்டத்தின் இலக்காகும். இத்திட்டம் மகாராஷ்டிர மாநிலத்தின் பால்கர் மாவட்டத்தில் உள்ள தானு என்ற இடத்தில் ஜூன் 16ஆம் தேதி தொடங்கப்பட்டது.

ஸ்மார்ட்போனில் மூழ்கும் இந்தியர்கள்... அதிகரிக்கும் டேட்டா பயன்பாடு!

பதநீரிலிருந்து பனை வெல்லம் தயாரிப்பதற்கான உபகரணங்களை 200 உள்ளூர் தொழிலாளர்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வழங்கியது. இதற்கான 7 நாள் பயிற்சியும் அவர்களுக்கு வழங்கப்பட்டது. ரூ.15,000 மதிப்புள்ள உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நடவடிக்கை 400 உள்ளூர் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்தி பனைத் தொழிலையும் பனைத் தொழிலாளர்களைக் காக்க மத்திய அரசு இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்