ஆப்நகரம்

மாதாந்திர வருமானத் திட்டம்... இதுல இவ்ளோ நன்மை இருக்கா?

தபால் நிலையங்களில் செயல்படுத்தப்படும் மாதாந்திர வருமானத் திட்டத்தின் பயன்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்துப் பார்க்கலாம்.

Samayam Tamil 26 Jul 2021, 9:55 pm
பணத்தை வைத்து நம்மால் அனைத்தையும் வாங்கிவிட முடியாது; ஆனால், நம்முடைய சுக வாழ்க்கைக்கு பணம் மிக அவசியமான ஒன்றாகும். பணத்தைச் சம்பாதிப்பதை விட அதைச் சேமிப்பது மிக முக்கியமான ஒன்று. நிகழ்காலத்தில் அனைத்தையும் செலவு செய்துவிட்டு எதிர்காலத்தில் அவசரத் தேவைக்கு ஒன்றும் இல்லாத நிலை ஏற்படாமல் இருக்க சேமிப்பு அவசியம். அதுவும் கொரோனா வந்த பிறகு சேமிப்பு மற்றும் அவசர காலத்துக்கான பணத் தேவை குறித்து பலர் புரிந்துகொண்டுள்ளனர்.
Samayam Tamil post office


இந்திய தபால் துறை சிறப்பான பல சேமிப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டங்களில் நல்ல வட்டி லாபமும் கிடைக்கிறது. மாதாந்திர வருமானத் திட்டத்தில் ஐந்தே ஆண்டுகளில் நல்ல ரிட்டன் கிடைக்கிறது. ஐந்து ஆண்டுகள் கழித்து அசல் தொகை கிடைக்கும். ஒருவேளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே சேமிப்புக் கணக்கை மூடவேண்டுமென்றால் அதற்கு அபராதம் செலுத்த நேரிடும். அதேபோல, கணக்கு தொடங்கிய முதல் ஆண்டில் கணக்கை மூட முடியாது.

வாழ்நாள் முழுவதும் பென்சன் கிடைக்கும்... ஒரே பிரீமியம்தான்!!

முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளைத் திறக்க முடியும். மாதாந்திர வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு தபால் நிலையத்துக்கு மாற்றலாம். இத்திட்டத்தில் 6.6 சதவீத வட்டி கிடைக்கிறது. அதிகபட்சமாக நீங்கள் ரூ.4.50 லட்சம் சேமிக்கலாம். இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக ரூ.9 லட்சம் வரையில் டெபாசிட் செய்யலாம். 1,000 ரூபாய் டெபாசிட் செய்து நீங்கள் கணக்கு திறக்கலாம். 18 வயதைத் தாண்டியவர்கள் கணக்கு திறக்க முடியும்.

இத்திட்டத்தின் கீழ் சிங்கிள் அக்கவுண்ட்டில் நீங்கள் குறைந்தது ரூ.4.5 லட்சம் சேமிக்க முடியும் என்பதால் 6.6 சதவீத வட்டியில் உங்களுக்கு மொத்தம் ரூ.29,700 வட்டி வருமானம் கிடைக்கும். ஒருவேளை இணைப்புக் கணக்காக இருந்தால் அதிகபட்சமாக உங்களுக்கு ரூ.59,400 வருமானம் கிடைக்கும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்