ஆப்நகரம்

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு கணக்கு.. எந்த சேவைக்கு எவ்வளவு கட்டணம்?

தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் பல்வேறு சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

Authored byசெந்தில் குமார் | Samayam Tamil 20 Feb 2023, 3:41 pm
இந்திய தபால் துறை செயல்படுத்தி வரும் சிறு சேமிப்புத் திட்டங்களில் தபால் நிலைய சேமிப்பு கணக்கு திட்டம் (savings account) மிக முக்கியமான ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் பொதுமக்கள் ஆர்வமுடன் முதலீடு செய்து வருகின்றனர். இத்திட்டத்தில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி கிடைக்கிறது. குறைந்தது 500 ரூபாய் இருந்தால் இத்திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்கி விடலாம்.
Samayam Tamil post office


இத்திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக இது தொடர்பான விதிமுறைகள் மற்றும் இத்திட்டத்துக்கான சேவைக் கட்டணம் உள்ளிட்ட விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

கட்டணங்களின் விவரம்:

  • டூப்ளிகேட் செக் புக் - ரூ.50
  • டெபாசிட் ரசீது காப்பீடு - ரூ.20 (ரசீது ஒன்றுக்கு)
  • அக்கவுண்ட் ஸ்டேட்ட்மெண்ட் - ரூ.20
  • நாமினேசன் கேன்சல் செய்ய - ரூ.50
  • நாமினேசன் மாற்றம் செய்ய - ரூ.50
  • பாதிப்படைந்த சான்றிதழ் அல்லது பாஸ்புக் மாற்ற - ரூ.10
  • புதிய காசோலை வழங்க - 10 லீஃப் வரை இலவசம்
  • புதிய காசோலை வழங்க - 10 லீஃபுக்கு மேல் லீஃப் ஒன்றுக்கு 2 ரூபாய்
  • அக்கவுண்ட் மாற்ற - ரூ.100

கணக்கு தொடங்குவது எப்படி?

போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு திட்டத்தில் கணக்கு தொடங்குவதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தைப் பார்வையிடலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்துக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு, மொபைல் நம்பர் போன்ற விவரங்கள் தேவைப்படும்.

எவ்வளவு வட்டி கிடைக்கும்?

தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டி என்பது, உங்களுடைய கணக்கில் உள்ள மினிமம் பேலன்ஸ் தொகை ஒவ்வொரு மாதத்தின் 10ஆம் தேதி முதல் இறுதிவரை கணக்கிடப்படும். இந்தக் காலத்தில் உங்களுடைய கணக்கில் குறைந்தது 500 ரூபாய் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வட்டி கிடைக்காது.

இத்திட்டத்துக்கான வட்டி லாபம் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் வாடிக்கையாளர்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டும். அரசு நிர்ணயித்துள்ள வட்டி எவ்வளவு என்பதைப் பொறுத்து இந்த தொகை வந்து சேரும். ஒருவேளை கணக்கை மூடுவதாக இருந்தால் அது வரையிலான வட்டித் தொகை கணக்கிட்டு வழங்கப்படும்.

சிறப்பு வசதிகள்:

போஸ்ட் ஆபீஸ் சேமிப்புக் கணக்கு திட்டத்தில் காசோலை, ஏடிஎம் கார்டு, இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், ஆதார் இணைப்பு, அடல் பென்சன் திட்டம், சுரக்‌ஷா பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா போன்ற வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.
எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்