ஆப்நகரம்

இலவச சிலிண்டர் வேணுமா? இப்படித்தான் அப்ளை பண்ணணும்!

உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு பெற எப்படி விண்ணப்பிப்பது?

Samayam Tamil 10 Aug 2021, 6:46 pm
இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் இரண்டாம் பாகம் உஜ்வாலா 2.0 என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று (ஆகஸ்ட் 10) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள ஏழைப் பெண்களுக்கு சுகாதாரமான சமையல் எரிவாயு வழங்கப்படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனும் இலவச சிலிண்டரும் கிடைக்கும்.
Samayam Tamil LPG


இத்திட்டத்தில் இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு www.pmuy.gov.in என்ற வெப்சைட்டிலேயே விண்ணப்பிக்கலாம்.

அந்த வெப்சைட்டில் சென்று இதற்கான விண்ணப்பத்தில் வாடிக்கையாளரின் பெயர், முகவரி, ஜன் தன் வங்கிக் கணக்கு விவரம், ஆதார் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

மேற்கூறிய விவரங்களுக்கான ஆவணங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதன் பின்னர் தகுதியானவர்களுக்கு பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.

ஒருவேளை ஈஎம்ஐ ஆப்சனை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் மானியத் தொகையில் அது கழிக்கப்படும்.

2021-22 மத்திய பட்ஜெட் அறிக்கையில் இலவச சிலிண்டர் திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது உஜ்வாலா 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்